திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மண்ணரில் சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஹோட்டல் ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்றைய முன்தினத்தில் காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ரோட்டினை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து மோதப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தனியார் பேருந்தில் முன்பாக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்ததில் அவர் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டை கடக்கும் போது பேருந்து முன் கீழே விழுந்ததில் அவர் மீது பேருந்து ஏறியுள்ளது என தெரியவந்துள்ளது.
இதனிடையே சுப்பிரமணியன் தனது நெருங்கிய சினேகிதனான சுப்ரமணியத்துடன் தினமும் நடைபயிற்சி செல்வார் என்றும் இவர் இறந்த செய்தியை கேட்ட நிலையில், சென்ற வாரம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர் இறந்த செய்தியை கேட்ட சோகத்தில் இவ்வாறு இவர் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.