fbpx

Breaking: தடம் புரண்ட “சார்மினார் எக்ஸ்பிரஸ்” 50 பயணிகள் படுகாயம்.! விபத்து நடந்தது எப்படி.?

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்மினார் எக்ஸ்பிரஸ் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு ரயில் நிலையத்தின் தடுப்புச் சுவரின் மோதி விபத்திற்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்திருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Post

நெஞ்சே பதறுது.! "சேர்ந்து வாழ கசக்குதோ.." இளம் பெண்ணை பிளேடால் கீறிய கணவன்.!

Wed Jan 10 , 2024
சென்னை அருகே மனைவியை பிளேடால் கீறிய வழக்கில் கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக்(25). இவருக்கு தமிழ்விழி(23) என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . திருமணமான நாளிலிருந்து கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்விழி தனது பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். […]

You May Like