fbpx

Driving Licence | சூப்பர் அறிவிப்பு..!! இனி ஓட்டுநர் உரிமம் வீடு தேடி வரும்..!! வெளியான குட் நியூஸ்..!!

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) பெறப்படும் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) இனி விண்ணப்பதாரரின் வீடுகளுக்கே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடும் நாள், நேரத்தில் அங்கு சென்று முதலில் ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) அடுத்து ஒரு மாத இடைவெளிக்குப்பின் ஓட்டுனர் உரிமம் பெறலாம். காலையில் வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை ஓட்டிக் காட்டி, போட்டோ எடுத்துக் கொண்ட பின்னர், மாலையில் ஓட்டுனர் உரிமத்தை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். இதுவே தற்போதைய நடைமுறை ஆகும்.

இதில் புதிய நடைமுறையாக இனி ஓட்டுனர் உரிமம் விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு தபாலில் அனுப்பும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர் ஒருமுறை சென்று ஓட்டிக் காட்டி தேர்ச்சி அறிவித்த பின் ஓட்டுனர் உரிமம் பெற என அலையத் தேவையில்லை. இதற்காக வழக்கமான ஓட்டுனர் உரிம கட்டணமான ரூ.520 உடன், தபால் செலவுக்காக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதே நடைமுறையில் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உரிமம், பதிவுச் சான்றிதழும் (ஆர்.சி., புக்) தபால் மூலமே வழங்கப்பட இருக்கிறது.

விண்ணப்பத்தில் குறிப்பிடும் முகவரி தவறாக இருந்தாலோ, விண்ணப்பதாரர் வீட்டில் இல்லையென்றாலோ ஓட்டுனர் உரிமம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கே திரும்பி விடும். இந்நிலையில், விண்ணப்பதாரர் அதனைப் பெற அலுவலகத்திற்கு சென்று சரியான சுயவிலாசம் எழுதிய தபால் உறையை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதனை மீண்டும் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Driving license is now looking for a home

Read More : ‘திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது’..!! ‘முற்றிலும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சி’..!! PM Modi விளாசல்..!!

Chella

Next Post

BJP | 'திமுகவின் கூடாரத்தை கலைத்தே ஆக வேண்டும்'..!! அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு..!!

Wed Feb 28 , 2024
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “காமராஜரின் ஆட்சியை இன்றைக்கு தமிழகமே எதிர்பார்த்திருக்கிறது. இன்னொரு புறம் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களைப் பெற்று கம்பீரமாக ஆட்சியில் அமர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் திசை மாறி இருக்கிறது. ஓர் ஊழல் அரசு, குடும்ப ஆட்சி, தனக்கென்று […]

You May Like