தேசிய செய்திகள்

சினிமா 360°

  • கன்னட மொழி சர்ச்சை.. கர்நாடகாவில் தக்லைஃப் படம் ரிலீஸ் ஆகுமா? உயர்நீதிமன்றத்தை நாடிய கமல்ஹாசன்..

    கன்னட மொழி சர்ச்சையை தொடர்ந்து, கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

    கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பல கன்னடக் குழுக்களும் மொழி ஆர்வலர்களும், கமல்ஹாசன் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். கன்னட ஆதரவு குழுக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) மாநிலத்தில் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. தனது கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படாது என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது. .

    இந்த மொழி சர்ச்சை சினிமாவைத் தாண்டி நகர்ந்துள்ளதாக சேம்பர் தலைவர் எம். நரசிம்மலு கூறினார். மேலும் “கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தக் லைஃப் கர்நாடகாவில் ஓடாது. இது நிச்சயமாக, இது தொழில்துறையைப் பற்றியது அல்ல, இது மாநிலத்தைப் பற்றியது..

    அரசியல் கட்சிகள் கூட இதை எதிர்க்கின்றன, கன்னட சார்பு அமைப்புகள் அவர் பதிலளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. அவர் மன்னிப்பு கேட்காமல் படத்தின் வெளியீடு கடினம். எங்கள் திரையரங்குகள் அல்லது விநியோகஸ்தர்கள் அதைத் திரையிடத் தயாராக இல்லை. படத்தை இங்கே எப்படி வெளியிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

    இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், கன்னட மொழிக்கு வளமான வரலாறு உள்ளது என்றும், கமல்ஹாசனுக்கு அது பற்றி தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

    அதே போல் கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும். “ஒருவர் தங்கள் தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவத்தை வெளிப்படுத்துவது கலாச்சார திவால்நிலையின் அடையாளம். குறிப்பாக கலைஞர்களுக்கு, ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் நெறிமுறைகளைக் கொண்டிருப்பது அவசியம்,” என்று அவர் கூறினார். கமல்ஹாசன் கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்திருந்தாலும், அவரது கருத்து அப்பட்டமான ஆணவத்தை பிரதிபலித்தது” என்று தெரிவித்தார்.

    எனினும் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் கூறிவிட்டார். இதுகுறித்து பேசிய அவர், “இது ஒரு ஜனநாயகம். நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மை. ஒரு சிலரை தவிர வேறு யாரும் அதை சந்தேகிக்க மாட்டார்கள். எனக்கும் ஏற்கனவே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, நான் தவறாக கூறி இருந்தால், நான் மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.” என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் , கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்லைஃப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதற்கான தடை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி தாக்கல் செய்த மனுவில், கர்நாடக அரசு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் திரைப்படத் துறை அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது..

    தக்லைஃப் படத்தை திரையிடுவதற்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதை காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

    மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படம் ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான முதலே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Read More : “என்ன மனசு சார்”..!! “முத்த மழை” பாடலால் மூழ்கிப் போன ரசிகர்கள்..!! பகிரங்க மன்னிப்புக் கேட்ட சின்மயி..!! என்ன காரணம்..?

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

இரவில் கனவு வருவது இயல்பான ஒன்று தான். இது தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்த வகையில் ஒருவர் தன்னுடைய கனவில் பல்லியைப் பார்ப்பது சுகமாக கருதப்படுவதில்லை. அதனால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இந்த கனவு எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என விரிவாக தெரிந்து கொள்வோம். ஒருவர் தன்னுடைய கனவில் ஒரு பல்லி பூச்சிகளை பிடித்து சாப்பிடுவது போன்று கண்டால், அவருக்கு நிதி […]

வீட்டில் முன்னோர்களின் படங்களை வைக்கும் செய்யக்கூடாத தவறு குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய கலாச்சாரத்தில், பித்ருக்கள் அதாவது முன்னோர்களுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு.. நம் முன்னோர்கள் இன்னும் நம் வாழ்வில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று நம்பப்படுகிறது. முன்னோர்களுக்கு நாம் மரியாதை கொடுத்தால், அவர்களின் பூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தவறான இடத்தில் முன்னோர்களின் புகைப்படங்களை வைத்தால், அவர்களின் ஆசீர்வாதம் தடைபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? […]

பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் ரோஹித் சாஹ்னி என்ற நபர், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை அளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டுத்தப்பியிருக்கிறார். மகளைக் காணவில்லை என்று தேடி வந்த தாயிடம், அக்கம் பக்கத்தினர், அவர் ரோஹித்துடன் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். ரோஹித் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது 9 வயது சிறுமி ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தனது மகளைப் பார்த்து கதறி அழுத […]

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கையில் இரு நாடுகளும் எவ்வளவு இழப்பைச் சந்தித்தன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , மே 7 அன்று பாகிஸ்தானில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது . இந்த நடவடிக்கையின் போது, ​​இந்தியா ஒரு மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்தது, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், இந்தியா பாகிஸ்தான் மீது […]

தொழில் பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாக கூறி 76 கிராம் தங்கம் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் (56). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். சில நாட்களாக தொழில் சரியாக கைகொடுக்கவில்லை என தனது நண்பரிடம் கூறி வந்துள்ளார். அப்போது அவர், பெரம்பூர் பெரியார் நகரில் […]

கன்னட மொழி சர்ச்சையை தொடர்ந்து, கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார். கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல கன்னடக் குழுக்களும் மொழி […]

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகே மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவாஹிர் என்பவரது மகன் முகமது ஷாம் (வயது 31). இவர், பட்டபடிப்புக்காக கடந்தாண்டு சென்னை சென்றார். அப்போது, அமைந்தக்கரை ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவரின் மகள் ரிஸ்வானா (21) என்பவருடன் முகமது ஷாமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர், இருவரும் காதலித்து வதனர். காதலித்தபோது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். […]

வெயில் கொளுத்தும் கோடை மாதங்களில் வழக்கறிஞர்கள், செப்டம்பர் 30 வரை மாவட்ட நீதிமன்றத்தில் கருப்பு கோட் அணிய வேண்டிய அவசியமில்லை என்று டெல்லி பார் அசோசியேஷன் (டிஸ் ஹசாரி) அறிவித்துள்ளது. பார் அசோசியேஷன் வெளியிட்ட சுற்றறிக்கையில், “1961 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 49 (1) (gg) இன் கீழ் விதியில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, கோடைகாலத்தில், அதாவது மே 16 முதல் செப்டம்பர் 30 வரை, வழக்கறிஞர்கள் கருப்பு […]

இந்திய மக்களின் சேமிப்பிலும் தங்கம் முதலிடம் வகிக்கிறது. அப்படியிருக்கையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு  நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலை உயர காரணம். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 9 வீரர்களை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கிமின் லாச்சென் மாவட்டத்தில் உள்ள சாட்டனில் நேற்று மாலை 7 மணியளவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 6 வீரர்கள் இன்னும் காணவில்லை என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் […]