பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்சமயம் அண்ணன், தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்று விட்ட சூழ்நிலையில், அந்த பிரிவை நிரந்தரம் ஆக்குவதற்கு ஜீவாவின் மாமனார் ஜனார்தனன் பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.
ஏற்கனவே ஜீவாவின் ஃபோனில் இருந்து ஜனார்தானன் பேசிய விவகாரம் மூர்த்திக்கு தெரிந்து விட்டதால் அவர் கோபமாக இனி ஜீவாவிற்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று எல்லோருக்கும் போன் செய்து தெரிவித்து வருகிறார். அதனை அறிந்து கொண்ட ஜீவாவும் வருத்தத்தில் இருந்து வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த வார எபிசோடுகளுக்கான விளம்பரம் வெளியாகி உள்ளது அதில் ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் ஜீவாவிடம் சூப்பர் மார்க்கெட் விற்பனை அதிகரிக்க ஐடியா கேட்கிறார். ஏதாவது கொடுத்தால் அருகில் இருக்கும் கடைகள் பாதிக்கப்படும் என்று ஜீவா சொல்கிறார்.
என்னுடைய அண்ணன், தம்பிகள் என் மீது கோபமாக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்க மாட்டேன் என ஜீவா தெரிவித்ததை கேட்டு ஜனார்த்தனன் சற்று அதிர்ச்சி ஆகின்றார்.
இதனை மாற்றுவதற்கு ஜீவாவின் மாமனார் இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.