fbpx

பொள்ளாச்சி அருகே வடமாநில கூலித் தொழிலாளி அடித்து கொலை…..! காவல்துறையினர் விசாரணை…..!

பொள்ளாச்சி அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) என்பவர் ரமண முதலிபுதூர் பகுதியில் இருக்கின்ற பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பணி முடிவடைந்த உடன் அருகில் இருக்கின்ற டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, ஏதாவது ஒரு இடத்தில் இரவு தங்கி விட்டு காலையில் பணிக்கு சென்று வருவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமண முதலிபுதூர் பிரிவு நாக பிள்ளையார் ஆலயம் எதிரி படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரை சில மர்ம நபர்கள் தலையில் மரக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். நேற்று காலை அந்த பகுதி வழியாக வந்த மக்கள் இதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வரைந்த கோட்டூர் காவல்துறையினர் அந்த வட மாநில தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு கீர்த்திவாசன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

பொன்னியின் செல்வன் வசூல்..!! லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!!

Tue May 16 , 2023
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். ஏற்கனவே, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் […]
பொன்னியின் செல்வன் வசூல்..!! லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!!

You May Like