டெல்லி செங்கோட்டையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு நபர் என 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
தற்போது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2011ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் முகமது ஆரிப் மனுத்தாக்கல் செய்திருந்ததால் தூக்கு தண்டனையை மறு சீராய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் 2011ம் ஆண்டே தூக்கிடப்பட்டிருக்க வேண்டிய ஆரிப்பின் தண்டனை தள்ளிப் போனது.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இந்த மறு சீராய்வு அமர்விலும் முகமது ஆரிப்புக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்டனை என்று நிறைவேற்ப்படும் என்பது உள்பட பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.