fbpx

அதிர்ச்சி..!! வண்டலூர் அருகே மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பலி..!!விடுமுறையை கொண்டாட வந்தபோது சோகம்..!!

இந்தாண்டு ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் வந்தது. அதாவது சனி, ஞாயிறு ஏற்கனவே விடுமுறை என்ற நிலையில், திங்கள்கிழமை ஆயுதபூஜையும், செவ்வாய்க்கிழமையான இன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறையாகும்.

இந்நிலையில், இந்த தொடர் விடுமுறை காரணமாக கர்நாடகாவில் இருந்து 3 சிறுவர்கள் தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் அருகே, ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

வண்டலூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது மின்சார ரயில் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் 3 பேரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் 3 பேருமே மாற்றுத்திறனாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து தாம்பரம் இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்கள் சுரேஷ் (11), விஜி மற்றும் மஞ்சுநாத் என்பது தெரிய வந்துள்ளது.

Chella

Next Post

’என்னதான் இருந்தாலும் அவ என்னோட EX’..!! ’என்கூட அனுப்பி வையுங்க’..!! கணவரை கட்டையால் தாக்கி பெண்ணை கடத்த முயற்சி..!!

Tue Oct 24 , 2023
புதுச்சேரி லிங்காரெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (30). இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தமிழக எல்லை பகுதியான கரசானூரை சேர்ந்த எழுமலை என்பவருடைய மகள் பிர்த்தியாவதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தர்மராஜின் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவியை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறி அவரை […]

You May Like