ஆந்திராவில் பொன்னியின்செல்வன் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணி ரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி பேசியது வைரலாகி வருகின்றது..
இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி மும்பை, ஐதராபாத், என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகின்ற 30ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த படத்திற்கான தெலுங்கு மொழி புரோமோஷன் விழா ஆந்திராவில் நடைபெற்றது. அப்போது மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி பேசினார். அப்போது ’’பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் படம் என்றாலும் , அது உங்களின் படம்தான் , ஏனெனில் வெறும் 10 நாட்கள்தான் பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரியில் ஷூட்டிங் எடுக்க்பட்டது. அதிக அளவில் ஐதராபாத்தில்தான் படம்பிடிக்கப்பட்டது எனவே அது உங்கள் படம் மாதிரிதானே ’’ என பேசியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தமிழக இளைஞர்கள் காண்டாகி உள்ளனர். அப்போ, தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு வேண்டாமா? தமிழ்நாட்டில் 10 நாட்கள் தானே ஷுட்டிங் எடுத்தீர்கள் பின்பு எதற்காக இங்கு விளம்பரம் தேடுகின்றீர்கள். தெலுங்கு மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதுமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
திரைப்படம் ரிலீஸ் நேரத்தில் இது போன்ற தேவையற்ற பேச்சு புரோமோஷனை சற்று தளர்த்தியுள்ளது. தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. விக்ரம் , கார்த்தி , ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி , திரிஷா , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன் என நட்சத்திர கூட்டமே இதில் ஜொலிக்க உள்ளது. இந்நிலையில் இந்த கருத்து தமிழக இளைஞர்களை கடுப்பேற்றி உள்ளது..