fbpx

மகளிர் டி20 உலகக்கோப்பை..!! முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென்னாப்ரிக்கா..!!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து – இந்தியா ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இதில், நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் கடுமையான இலக்கை நோக்கி இறுதிவரை போராடிய இந்திய மகளிர் அணி, 5 ரன்களில் வெற்றியைத் தவறவிட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தொடக்க பேட்டர்கள் வால்வார்டிட் மற்றும் பிரிட்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். வால்வார்டிட் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க, மறுமுனையில் பிரிட்ஸ் 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பேட்டர்களில் காப்-ஐ தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

Chella

Next Post

காதலித்து ஏமாற்றிய மாணவி..!! உல்லாச வீடியோவை வெளியிட்ட 25 வயது இளைஞன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Sat Feb 25 , 2023
மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இலங்கை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு கடந்த புதன்கிழமை அன்று நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக இளைஞர் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 […]

You May Like