ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் […]
வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று உடம்பில் துணி இல்லாமல் தூங்கும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில், ரிஷப் பந்த் வரலாற்றில் தனது பெயரை பொறித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வமான சாதனையை அவர் நிகழ்த்தினார் . அதாவது போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, செம்மையான படைப்பு மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சிவப்பு பந்து (red-ball cricket) போட்டிகளில் இது அவரின் மிக முக்கியமான சாதனைகளில் […]
உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]
தங்கம் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் தங்கத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். எந்தவொரு சிறிய விழாவிற்கும் தங்கம் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை வாங்குவதற்காக நீண்ட காலமாக பணத்தை சேமித்து வைப்பவர்கள் கூட இருக்கிறார்கள். இந்து மதத்தில், தந்தேராஸ், குரு புஷ்ய யோகம், அக்ஷய திருதியை போன்ற நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தங்கம் வாங்கும் பாரம்பரியம் பழமையானது. மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்க […]
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் நாளை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]
கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு […]
வரும் ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்; பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தும் முறையாக சென்றடைகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறந்த நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் […]
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் […]