சென்னை பரந்தூரில் அமைக்க முன்மொழியப்பட்ட 2-வது சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கிராம மக்களின் தொடர் எதிர்ப்புகள் காரணமாகக் கைவிட தவெக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 2022 ஆகஸ்ட் மாதம் பரந்தூர் விமான நிலையத் […]

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதார சுமையைக் குறைப்பதிலும் மிக முக்கியமான திட்டமாக ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைப் பெருமளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வரவுள்ளதாகச் சட்டமன்றப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான […]

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்காக மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய் ” கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் […]

கேரளாவை சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ என்ற 19 வயதே ஆன இளம்பெண், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 மகுடத்தை சூடினார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில், கேரளாவின் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான சட்டக்கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo) ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்றுள்ளார். 52 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், அவருக்கு முந்தைய வெற்றியாளரான மனிகா […]

உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் விலைமதிப்பற்ற உலோகங்களை நோக்கித் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்ந்தன. இதன் விளைவாக, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தையும், வெள்ளியின் விலை 15 வார கால உச்சத்தையும் எட்டின. அந்தவகையில் வாரத்தின் முதல்நாளான இன்று (ஆகஸ்ட் 24) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 […]

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், பகலில் கணவருடனும் இரவில் காதலனுடனும் ஒரே வீட்டில் இணைந்து வாழ அனுமதி கோரி காவல் நிலையத்தில் வைத்த விசித்திரமான கோரிக்கை அங்கிருந்த போலீசாரையே நிலைகுலைய வைத்துள்ளது. சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு வர்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சுவிற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நிதின் விஸ்வகர்மா என்ற வாலிபருடன் […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசினார். அப்போது பேசிய அவர், “தான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருபவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். அத்தகைய வீட்டின் பத்திரத்தை யார் நேரில் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக முழு மனதுடன் அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தார். தாங்கள் தீவிரமாக மக்கள் பணியாற்றுவதற்காக […]

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலிஃபிளவர் சார்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. சமீபத்தில் உணவகங்களுக்குக் கொண்டுவரப்பட்ட காலிஃபிளவர்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் எவ்வித சுகாதாரக் குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கோபி மஞ்சூரியன், […]

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 23-ஆம் தேதி) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும், ராகுல் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து […]

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்து சிறப்புப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக இன்று (ஆகஸ்ட் 24) பெய்ஜிங் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. செப்டம்பர் 12, 13 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் […]