மேகாலயாவின் மலைப்பகுதிகளில் இருந்து வெளியான ஒரு வீடியோ மீண்டும் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள படாவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பிர்து, மிளகாய் சாப்பிடும் திறனுக்காக பிரபலமானார். மீண்டும் வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், ராம் 10 கிலோவுக்கு மேல் சூடான காய்ந்த மிளகாயை உட்கொள்வதை பார்க்கலாம்.. அதை சாப்பிடும் போது அவர் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை.. அவருக்கு வியர்வையும் வரவில்லை.. […]

மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ஆயுதப்படைகள் ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரித்து கூறப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தக் கூற்றை மீண்டும் கூறினார். இந்தியா ஐந்து பாகிஸ்தான் […]

அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.. விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. குறிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி 3 […]

தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டனமுன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட […]

பீகாரின் பூர்னியாவில் இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் குறைந்தது 4 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், அதிகாலை 5:00 மணியளவில் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அக்டோபர் 1, 2028 முதல் அமல்படுத்தப்படும் வகையில் ஆதார் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்துள்ளது… குறிப்பாக குழந்தைகள் மற்றும் டீனேஜர்களிடையே, சரியான நேரத்தில் பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஆதார் சேவைகளை நெறிப்படுத்துவதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. திருத்தப்பட்ட சேவை கட்டணங்கள் முன்னர் ரூ.50 ஆக இருந்த சேவைகள் இப்போது ரூ.75 ஆக இருக்கும். முன்னர் ரூ.100 ஆக […]