நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயதான பாபுராஜ் (ஐடி மாணவர்) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் கைகூடாத நிலையில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணப்பெண் திடீரென தனது முன்னாள் காதலன் பாபுராஜை தொடர்பு […]

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தேங்காய் வியாபாரி ஒருவர், தனது 17 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வியாபாரிக்கு மனைவியும், பிளஸ்-2 படிக்கும் 17 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. 18 […]

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது அதன் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில், வரவிருக்கும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தனது முழு வீரியத்தை காட்டி, மீண்டும் பல பகுதிகளில் நல்ல மழையைப் பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்துத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதம், தமிழகத்தில் பரவலாக […]

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் போன்ற இடங்களில் உணவுப் பொருட்களைத் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தள்ளுவண்டிகளில் உணவுப் […]

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துப் புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரியாக இருக்கிறதா, நீக்கப்பட வேண்டிய பெயர்கள் உள்ளனவா மற்றும் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டுமா போன்ற விவரங்களை சரிபார்ப்பதே இந்தப் பணியின் நோக்கமாகும். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகள், டிசம்பர் 4ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், சுமார் […]

சென்னை தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள இராமச்சந்திரா தெருவில் அமைந்திருக்கும் ‘மங்கள வில்லா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் கிரிதர் என்பவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், கிரிதர் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தமிட்டவாறே […]

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 5,90,13,184 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 92.04 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5,90,13,184 படிவங்கள் இதுவரை ( நவம்பர் 15 மாலை 3 மணி வரை ) விநியோகிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் […]

நாமக்கலில் ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. 2024 டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 590 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே, […]

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த […]

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசசன் நமக்கு அளித்த முதல் உரிமை.. வாக்களிப்பது என்பது உரிமை இல்லை.. அது தான் வாழ்க்கை.. SIR மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது.. […]