சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு, அவரது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்த சாந்தி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வேலூரில் வசித்து வந்தார். இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு சாந்தியின் முதல் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவரைக் கவனித்துக் கொள்வதற்காகச் சாந்தி தனது மகளை அவரது அத்தை வீட்டில் விட்டுச் சென்றார். […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் […]

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது “ மகளிரின் பொருளாதார விடுதலைக்கு உதவும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடி 14 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகையை முதல்வர் வழங்கி வருகிறார்.. 26 மாதங்களாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை ரூ.26,000 கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.30,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தில் கூடுதல் மகளிர் பயனடைய […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24) என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஆர்த்தியின் தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஆர்த்தி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் கறக்கும் தொழில் செய்து வந்த ராமச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை ஆர்த்தியின் குடும்பத்தினர் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் […]

சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடனின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 6,000-இல் இருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்க கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தேசிய அளவிலான வர்த்தக […]