கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து […]

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மூத்த மகள் மீனாட்சி (23), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான ஆணுடன் மீனாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். மகளின் எதிர்காலம் குறித்து கவலையடைந்த மீனாட்சியின் பெற்றோர், இந்தத் தொடர்பைக் கைவிடுமாறு தங்கள் மகளைக் கண்டித்துள்ளனர். மேலும், அந்த ஆண் நண்பரையும் […]

தவெக பொதுக்குழு கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களுக்கு, வணக்கம்‌. நம்‌ அரசியல்‌ பயணத்தில்‌ அர்த்தம்‌ பொதிந்த ஓர்‌ ஆழ்நீள்‌ அடரமைதிக்குப்‌ பிறகு, உங்களோடு பேசவும்‌ உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம்‌ இது. சூழ்ச்சியாளர்கள்‌, சூதுமதியாளர்கள்‌ ‘துச்சமாக எண்ணி நம்மைத்‌ தூறு செய்த போதினும்‌, அச்சமின்றி அத்தனையையும்‌ உடைத்தெறிந்துவிட்டு நம்‌ […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தென்காசியில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் தென்காசிக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மக்களை மகிழ்க்கவும், காக்கவே, இந்த ஆட்சி, மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி.. இந்த நான்கையும் 4 ஆண்டுகளாக செய்து வருகிறோம்.. திமுக அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் […]

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் அரசு சார்பில் நடை.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது ” தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி தென்காசிக்கு செல்வதாக இருந்தது.. ஆனால் கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தென்காசி சென்றுள்ளார்.. தென்காசியில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.. மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட […]

அவிநாசி அருகே மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அதிமுக கிளை செயலாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (51) என்பவர் அதிமுக கிளை செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர், மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. […]

தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு அமைச்சரின் கைது குறித்த பரபரப்பான யூகங்கள் எழுந்துள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் விளைவாக, அமைச்சர் நேரு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு என்ன..? அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், நகராட்சி […]