திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]

வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கோயில்களுக்காக கொண்டாடப்படும் காஞ்சிபுரம் நகரம், சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது – ஆனால் இந்த முறை மிகவும் வித்தியாசமான காரணத்திற்காக. திருமணம் மற்றும் டேட்டிங்கிற்கான முன்னணி தளமான ஆஷ்லே மேடிசனின் தரவுகளின்படி, கள்ளக்காதலில் ஆர்வம் காட்டுவதில் காஞ்சிபுரம் இப்போது இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2024-ல் 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.. ஆஷ்லே மேடிசனின் சமீபத்திய அறிக்கை […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.. அந்த வகையில் விஜய்யின் தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. 2026 தேர்தல் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்று அக்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.. இந்த நிலையில் தவெகவின் 2-வது மாநில […]

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படும் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் தொடங்கி இரவு 7.30 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். இது வெறும் கட்சி கூட்டமாக இல்லாமல், ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வாகவும், விஜய்யின் அரசியல் அடுத்த கட்ட பயணத்திற்கான துவக்கமாகவும் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் […]

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, மாநில அரசுகள் […]

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர். உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbslm.in என்ற இணையதளம் வழியாக Online […]

பள்ளிக்கல்வித் துறையில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கரையவெட்டி (அரியலூர்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டுநாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூர்), […]