சூரமங்கலம் பகுதியில் அண்ணன் – தம்பி சேர்ந்து பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனங்காடு ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஒரு டெக்வாண்டோ பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது பயிற்சி மையத்தில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது வழக்கம். அந்த […]

கராத்தே பயிற்சிக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை மயக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த அப்துல் வகாப் (37), கராத்தே மாஸ்டராக டவுன் கோடீஸ்வரன் நகர் மற்றும் பாளை கே.டி.சி. நகர் ஆகிய இடங்களில் […]

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை குறித்து இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், “அதிகாரத்தின் மீது அடக்குமுறையை விரும்பும் பாஜக அரசு, அடிமைத்தனமே அடையாளமாய் செயல்படும் அதிமுக அரசு ஆகியவற்றின் போக்குகளுக்கு மாற்றாக, திமுக அரசு சமூக நீதியை தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், […]

தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டி கிராமத்தில், ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த வையாபுரி, நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தேனியில் ஒரு மருத்துக் கடையில் வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட திரையுலக ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றது. முதலில் ‘சின்ன மருது பெரிய மருது’, ‘மால்குடி டேஸ்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். பின்னர், நடிகர் விவேக் மூலம் ‘இளைய […]

தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட […]

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மகள் திரிஷா (20). இவரும் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த ராபின் (22) என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, திரிஷாவும் ராபினும் வேப்பேரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி […]

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் […]