ஆந்திராவில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பேரணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர் ஒருவர் வாகனம் மோதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சத்தேனப்பள்ளி அருகே, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாகன ஊர்வலம் சென்றார். அவரை வரவேற்க சீலி சிங்கையா என்ற 54 வயது நபர், கம்பியைத் தாண்டி வாகனத்துக்கு அருகில் சென்றதாகக் […]

உலகெங்கும் உள்ள முருக பக்தர்களை ஒருமித்துப் பிரமாண்ட நிகழ்வாக நடத்தும் நோக்கில், மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு வெகு விமரிசையாக தொடங்கியது. இந்து முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில், சங்கத்தை உருவாக்கி தமிழ் வளர்த்த மதுரையிலேயே, தமிழ்க்கடவுள் முருகனுக்காக இம்மாநாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை மையமாகக் கொண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, முருகனுக்கான பற்று மக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது. வேல் […]

சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய விமானம் விமான நிலையத்திலேயே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனெனில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விமானத்தை உடனே தரையிறக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும். தற்போது, […]

2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக யாருக்கு வாய்ப்புள்ளது? என்பதைப் பற்றி லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அரசியலுக்கு புதிதாக […]

சேலம் மாவட்டத்தில், ஆயுதப்படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்” வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் வருபவர்களின் சவாலான […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 23 முதல் 27-ம் தேதி […]

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-26ம் கல்வியாண்டிற்கு அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS Online)-யில் விண்ணபிப்பது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது. 2021-22 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயர் மற்றும் […]

திருவள்ளூர் கோட்டத்தை சேர்ந்த 110 கிலோ வோல்ட், பெரியபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி நெல்வாய் மற்றும் நெய்வேலி மின்பாதை பராமரிப்பு பணிகள் வரும் ஜூன் 24-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை பெரியபாளையம் பஜார், நெல்வாய், பாலேஸ்வரம், ராசந்திரபுரம், அஞ்சாமேடு, பனம்பாக்கம், ஆலபாக்கம் அத்திவாக்கம், கிளாம்பாக்கம், நெய்வேலி பெத்தநாயகபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு […]

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் நலக்குறைவு காரணமாக 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் […]