மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் தமது நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பின்னர் கார் வாயிலாக ரமண […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மதுரை மாவட்டம் புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் உள்ள கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தா (33) ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாந்தா வேலை செய்த கடையில், பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் பணியாற்றியதால், அவரது வீட்டிற்குச் சாந்தா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25) என்பவருடன் […]
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு தடை விதித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோவில் தரிசனத்திற்கு வரும்போது, அவர்கள் வருகை தரும் நேரம் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க […]
பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர்தீன் சிறையில் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே கைதிகள் சிறையில் அடைக்கப்படும் சூழலில், அரசின் நில மோசடியை அம்பலப்படுத்திய வழக்கில் தொடர்புடையவருக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]
தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக தமிழக சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து குறைந்து, பல்வேறு அரிசி ரகங்களின் விலை சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கும் […]
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுபான பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக தினசரி அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மதுபானங்களை பயன்படுத்திய பின்னர் காலியாகும் பாட்டில்களை சேகரித்தல், மறுசுழற்சி […]
இலங்கையின் நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடலில் நிலவிய சூறைக்காற்று காரணமாக […]
தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் நோக்கில், பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை புதிய வரியை விதிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காலியாகும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற பெயரில் இந்த புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, 2006-ஆம் ஆண்டின் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கான […]
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கும் அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கும் வசதியாக, டாஸ்மாக் நிறுவனம் விரிவான கணக்கெடுப்புப் பணியை தொடங்கியுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டின் மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் மதுக்கடைகள் அமைக்கப்படக் கூடாது. இருப்பினும், பல இடங்களில் […]
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள இருபோக சாகுபடிப் பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காகவும், அதேபோன்று தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பெரியாறு அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பாசனத்திற்கு வினாடிக்கு […]

