பலருக்கு அசைவ உணவுகள் என்றாலே அலாதி பிரியம் தான்.. கோழி, ஆட்டிறைச்சி, மீன், இறால் போன்ற உணவுகள் இல்லாமல் ஒரு வேளை உணவு முழுமையடையாது என்று கருதுபவர்களும் உண்டு. இருப்பினும், எல்லா இறைச்சிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஊட்டச்சத்து மதிப்பு, கொழுப்புச் சதம் மற்றும் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், இறைச்சி முக்கியமாக சிவப்பு இறைச்சி மற்றும் வெள்ளை இறைச்சி எனப் பிரிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி […]
லைஃப் ஸ்டைல்
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
இந்தியர்களின் சமையலறையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் உப்பு, தற்போது பலருக்கு ஆயுட்கால நோய்களை பரிசாக அளித்து வரும் ஒரு நிசப்த கொலையாளியாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) எச்சரிக்கைப்படி, ஒரு ஆரோக்கியமான மனிதன் நாளொன்றுக்கு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி) உப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்களின் சராசரி உப்பு நுகர்வு 8 முதல் 11 கிராமாக இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த […]
உலகளவில் புற்றுநோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் நவீன வாழ்வியல் முறைகளே இந்த அபாயத்திற்கு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ’கூல் லிப்’ (Cool Lip) போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கல்பனா மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சிகரெட்டில் உள்ள அதே நிக்கோட்டின் இதிலும் கலந்திருப்பதால், இது நேரடியாக ரத்த […]
வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் மற்ற பூச்சிகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த, நாம் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு பொருள் ‘நாப்தலின்’ உருண்டைகள் (Naphthalene Balls). துணிகள் வைக்கும் பீரோக்கள் முதல் கட்டிலின் இடுக்குகள் வரை ஆங்காங்கே போடப்படும் இந்த சிறிய வெள்ளை நிற உருண்டைகள், உண்மையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் என்பதைப் பலரும் உணருவதில்லை. குறிப்பாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ‘ரசூண்டைகள்’ பயன்படுத்துவது பெரும் […]
பெண்களின் உடல் ஒரு நுணுக்கமான உயிரியல் கடிகாரத்தை போன்றது. கருவுறுதல் மற்றும் தாய்மை என்பது அந்தந்த காலத்தின் வயது மற்றும் கருமுட்டைகளின் இருப்பைப் பொறுத்தே அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு காரணங்களால் திருமணமும் குழந்தைப்பேறும் தள்ளிப்போகும் சூழலில், ‘எந்த வயது வரை இயற்கையாகக் கருத்தரிக்க முடியும்?’, ’30 வயதிற்குப் பிறகு கருத்தரிப்பது பாதுகாப்பானதா?’ போன்ற கேள்விகள் பலரிடையே எழுகின்றன. இது குறித்துப் பெங்களூருவைச் சேர்ந்த மகளிர் […]
புற்றுநோய் என்பது முதுமையில் மட்டுமே வரக்கூடிய நோய் என்ற பிம்பம் தற்போதைய சூழலில் முற்றிலும் உடைந்துவிட்டது. சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் இந்த பாதிப்புக்கு உள்ளாவது மருத்துவ உலகையே கவலை கொள்ள செய்துள்ளது. “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கேற்ப, இளம் வயதிலேயே தகுந்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது கட்டாயமாகியுள்ளது. இருப்பினும், நமது அன்றாட வாழ்வியலில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்துகொள்வதன் மூலம், சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை புற்றுநோய் […]
மது அருந்துவது பலருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. பலர் மது அருந்தும்போது புகைப்பிடிக்கவும் செய்கிறார்கள். இப்படிச் செய்தால் ஒரு நல்ல போதை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு கையில் மதுக் கோப்பையையும், மறுகையில் சிகரெட்டையும் வைத்துக்கொண்டு, மாறி மாறி அருந்துகிறார்கள். இருப்பினும், இந்த இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொள்வது நன்மையை விட அதிக தீமையையே விளைவிக்கும் என்றும் […]
மனித வாழ்நாள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கான விடையைப் பற்றி மனிதர்கள் எப்போதும் ஆர்வமாக இருந்துள்ளனர். தாங்கள் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதைத் தெரிந்துகொள்வது, வாழ்க்கையைப் பற்றிய தங்கள் முடிவுகளை மாற்றும் என்று பலர் கருதுகின்றனர். சமீபத்திய ஒரு ஆய்வு இந்த நித்தியமான கேள்விக்கு ஒரு வியக்கத்தக்க புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. ஒரு நபரின் வாழ்நாளுக்கான அறிகுறிகள் உடலுக்குள் அல்ல, மாறாக வெளிப்புறத்தில் தோன்றும் நகங்களில்தான் மறைந்துள்ளன என்று […]
நாம் உண்ணும் உணவு நமது பசியைத் தணிப்பதற்காக மட்டுமல்ல, நமது எதிர்கால ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. ஆனால், பல நேரங்களில் நாம் சுவையின் வலையில் சிக்கி, நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் மூழ்கிவிடுகிறோம். இத்தகைய பழக்கங்கள் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில வகை உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது புற்றுநோயின் அபாயத்தை ஓரளவிற்கு குறைக்க உதவும். அப்படியானால், அந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க நாம் என்ன […]
மதிய உணவுக்குப் பிறகு ஏற்படும் அந்தச் சிறு மயக்கமும், அதைத் தொடர்ந்து நாம் போடும் குட்டித் தூக்கமும் வெறும் சோம்பேறித்தனம் அல்ல; அது நம் மூளையை ‘ரீசார்ஜ்’ செய்யும் ஒரு அற்புதமான அறிவியல் செயல்முறை என்பது தற்போது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இரவு நேரத்தில் ஆழ்ந்து உறங்கினால் மட்டுமே மூளை புத்துணர்ச்சி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், மதிய நேரக் குட்டித் தூக்கமும் அதே அளவிலான நன்மைகளைத் தருகிறது […]

