இன்றைய அவசர உலகில், மீந்துபோன உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது மீண்டும் சூடுபடுத்தி உண்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால், சூடுபடுத்துவதுதானே என்று நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த செயல், சில குறிப்பிட்ட உணவுகளைப் பொறுத்தவரை மெதுவான நஞ்சாக மாறக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மறுமுறை சூடுபடுத்தக் கூடாது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் அபாயங்கள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம். […]

நவீன காலத்தின் வேகமான ஓட்டத்தில், நமது சமையலறைகளில் புகுந்துள்ள மைக்ரோவேவ் அவன் மற்றும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் வேலையை எளிதாக்கி இருக்கலாம். ஆனால், இந்த அவசர கதியில் நாம் மறந்துபோன ஒரு மிகச்சிறிய விஷயம் ‘அரிசியை ஊறவைப்பது’ நமது ஆரோக்கியத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. அரிசியைக் கழுவி அப்படியே அடுப்பில் ஏற்றுவது நேரத்தை சேமிக்கலாம், ஆனால் அது நீண்ட கால நோக்கில் உடலுக்குப் […]

மதுரையின் மண் வாசனை மாறாத சமையல் கலைக்கு ஒரு மகுடம் வைத்தாற்போல் திகழ்வதுதான் ‘சிக்கன் மிளகு சுக்கா’. காரசாரமான சுவையும், மூக்கை துளைக்கும் நறுமணமும் கொண்ட இந்த அசைவ உணவு, நாவிற்கு விருந்தளிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் சேர்க்கப்படும் நாட்டு மசாலாக்களால் உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. சளி மற்றும் இருமலுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படும் மிளகை அடிப்படையாகக் கொண்டு, மதுரையின் பாரம்பரிய முறையில் இந்த சுக்காவை வீட்டிலேயே எளிதாகச் செய்வது […]

நாம் உண்ணும் உணவு சரியாகச் செரிமானம் ஆகி, கழிவுகள் வெளியேற்றப்பட்டால் மட்டுமே நாம் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று அர்த்தம். ஆனால் சிலருக்கு இந்தச் செயல்முறை இறுதிவரை சீராக நடப்பதில்லை. அதாவது, அவர்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். வாழ்க்கை முறை மாற்றங்கள், வெளி உணவுகள் மற்றும் துரித உணவுகளை உண்பது ஆகியவை இதற்கு காரணங்களாகும். குறிப்பாக, நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து இல்லாததே மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம். இருப்பினும், இந்தப் பிரச்சனையால் […]

இப்போதும் கூட பலர் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உணவுப் பழக்கம் மற்றும் பிற காரணிகளே சிறுநீரகப் பிரச்சனைகளுக்குக் காரணமாகும். குறிப்பாக, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கான இரண்டு முக்கிய காரணங்களாகும். சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொள்வது இந்த நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக, பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட […]

உலர் பழங்களிலேயே அக்ரூட் பருப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. அக்ரூட் பருப்புகளைத் தொடர்ந்து உட்கொள்வது மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்க, உலர் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியத்தின் மீது அக்ரூட் பருப்புகளின் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு உலர் பழத்திற்கும் அதன் நன்மைகள் இருந்தாலும், அவற்றுள் […]

சென்னையில் காகங்கள் இறந்த நிலையில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.. இது தொடர்பாக உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் பறவை காய்ச்சல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.. இந்தப் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவுகிறதா? அப்படியானால், அதற்கான காரணம் […]

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் குறித்து பல்வேறு ஐயங்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவின. குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக்கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 60,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இந்த அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தடுப்பூசி விநியோகம் தொடங்கிய பிறகு, ஸ்வீடன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் சற்று குறைந்திருந்தது. இதைச் […]

இன்றைய அவசர உலகில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை வயது வித்தியாசமின்றி பலரையும் பாதிக்கும் பொதுவான சுகாதாரப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, மூளைக்கான ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையால் உண்டாகும் பக்கவாதம், ஒருவரின் வாழ்நாளையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது. இதய ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தாலோ அல்லது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்தாலோ ‘இஸ்கிமிக்’ வகை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உயிருக்கு ஆபத்தான பாதிப்பிலிருந்து […]

சமைத்த காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதமிருந்தால், அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது மீண்டும் சூடுபடுத்துகிறோம். பொதுவாக, சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவதில் பெரிய பிரச்சனை இல்லை. இருப்பினும், சில வகை உணவுகளை மீண்டும் சூடுபடுத்தவே கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர் (மீண்டும் சூடுபடுத்தக்கூடாத அபாயகரமான உணவுகள்). அவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சாதம்: அறை வெப்பநிலையில் வைக்கப்பட்டிருந்தால், அதில் உள்ள […]