நாட்டின் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. விவசாயிகளுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்காக ஒரு சிறப்பு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் […]

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் (BSNL), 2026 ஆம் ஆண்டிற்கான 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (SET) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, மார்ச் 7 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் மொத்த பதவிகள்: 120 தொலைத்தொடர்புத் துறை: 95 நிதித் துறை: 25 சம்பளம் : ரூ.24,900 – ரூ.50,500 வரை. முக்கிய தகவல் பணியமர்த்தல் நிறுவனம்: […]

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான நபர் ஒருவர் தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து, சடலத்தை இரும்புப் பெட்டியில் அடைத்து செப்டிக் டேங்கிற்குள் வீசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போபாலின் நிஷாத்புரா பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் கோந்தியா மாவட்டத்தைச் சேர்ந்த சியா என்ற இளம்பெண்ணுடன் சமீருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீரின் குடும்பப் பின்னணியை அறியாத சியா, அவரை […]

இந்தியாவில் ஒரு காலத்தில் திருமணம் என்பது குடும்ப பெரியவர்களால், சாதி மற்றும் ஜாதக பொருத்தங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் (2016-2025) இந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளதை ‘ஜீவன்சாதி’ (Jeevansathi) தளம் நடத்திய விரிவான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைய இளைஞர்கள் திருமணத்தை ஒரு கடமையாகப் பார்க்காமல், தங்களுக்குப் பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாழ்வியல் முடிவாகவே கருதுகின்றனர். இதனால், திருமணத்திற்கான சராசரி வயது 27-லிருந்து […]

தமிழ்நாட்டை போலவே அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டத்தில், தற்போது ஒரு அதிரடி மாற்றத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கல்வியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் நோக்கில், இனி 6-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் விலையில்லா […]

ஹரியானா மாநிலம் பல்வல் மாவட்டத்தில் உள்ள சாயன்சா (Chayansa) கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அசுத்தமான குடிநீரை பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பள்ளிச் சிறுவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இந்தக் கிராமத்தில் முதல் […]

கொல்கத்தாவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில், ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது கணவர் அருண் மற்றும் நர்சிங் படிக்கும் தங்கை மீரா ஆகியோரின் துரோகத்தால் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகிறார். நர்சிங் படிப்புக்காக அக்கா வீட்டில் தங்கியிருந்த மீரா, கடந்த ஓராண்டாக தனது அக்காவின் கணவர் அருணுடன் முறையற்ற தொடர்பில் இருந்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு, இருவரும் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்து […]

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஒரு திரைப்படத் திரைக்கதையை மிஞ்சும் வகையிலான வினோத திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. “என் மனைவி என்னைக் கொன்றுவிடுவார் எனப் பயமாக இருக்கிறது” என்று கூறி, தனது மனைவியை அவரது காதலனான சொந்த மருமகனுக்கே கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாக்பத்தைச் சேர்ந்த பங்கஜ் என்பவருக்கும் பூஜா என்பவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில், காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14) ஒரு சினிமா பாணியிலான மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி மற்றொரு நபருடன் நெருக்கமாக சுற்றித் திரிவதைப் பார்த்த கணவர், ஆத்திரத்தில் இருவரையும் நடுரோட்டில் வைத்துத் தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாப்பூர் நகரின் முக்கியப் பகுதியான மீரட் சாலை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மனைவியின் […]

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காலி மனை ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான போபாலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சமீர் என்பவரை தீவிரமாகக் காதலித்த […]