நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டிய நிலையில், தொற்று பரவல் குறித்து கவலை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 306 புதிய கோவிட்-19 வழக்குகளும், ஆறு இறப்புகளும் […]

ஒரு சொத்தை பதிவு செய்தால் மட்டும் அந்த சொத்தின் உரிமை கிடைக்காது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பதிவு ஆவணங்கள் வெறும் கூடுதல் ஆதாரமாகவே பார்க்கப்படும் என்றும், உரிமையை நிலைநாட்ட, அனைத்து சட்டபூர்வ ஆவணங்களும் இருந்தாலே தான் உரிமை உரியவரிடம் இருப்பதாக கருதலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதியான உரிமைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்: அதேபோல் ஆவணங்கள் அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய […]

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளால் ஏற்பட்ட அழிவால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவை எதிர்கொள்ள புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது […]

ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார். கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை போல் தற்போது ஏசி பயன்பாடும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில், […]

பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று கூறி பெண் நீதிபதியை அவமதித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை வாய்மொழியாகத் தாக்கி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]

அண்மை காலமாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் இந்த போக்கினை அதிகமாக காண முடிகிறது. தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11% அளவிற்கு சரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவாக 2024 ஆம் ஆண்டில் 8.50 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி […]

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள், கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை கூகுள் நிறுவனம் அவ்வபோது சோதனை செய்கிறது. அதில் பிரச்னைகளுக்கு உள்ளாகும் செயலிகள் உடனடியாக நீக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது பயனாளிகளுக்கு தெரியாமலேயே அவர்களின் மொபைல் போனில் இருந்து தகவல்களை திருடியதாக 20 […]

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கட்ஜு மருத்துவமனையில் ஜோதி என்ற பெண் கட்ஜு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மருத்துவமனையின் நோடல் அதிகாரி டாக்டர் ரச்னா துபே கூறுகையில், ஏப்ரல் 9ம் தேதி ஜோதிக்கு பிரசவம் நடந்ததாகக் கூறினார். திருமணமான ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் […]