நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீப காலங்களில், AI கருவிகளைப் பயன்படுத்தி, ஒருவரின் உண்மைப் புகைப்படங்களை சிதைத்து, ஆபாசமான அல்லது தவறான சித்தரிப்புகளாக மாற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் அத்துமீறல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனிநபரின் அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல், […]

சினிமா ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் வகையில், இந்தியாவில் முதல் முறையாக, டைனிங் டேபிளில் அமர்ந்து சினிமா பார்த்தபடியே சுடச்சுட உணவருந்தும் வசதி பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு செல்லும் போது வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லாதது, அத்துடன் இடைவேளையில் காஃபி, பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, முழுமையான உணவை உட்கொள்ளும் வாய்ப்பை இந்தச் சேவை வழங்குகிறது. பெங்களூருவின் ஓசூர் சாலையில், […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது. தொடர்ந்து இந்த இருமல் மருந்து பயன்படுத்திய குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 16 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் […]

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் தொழில், அரசியல், தனியார் மற்றும் அரசுப் பணிகளில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு பொறுப்புகளில் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். பல்வேறு அத்துமீறல்கள், சவால்கள் மற்றும் தடைகளைத் தகர்த்து, அவற்றைச் சாதனைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுகின்றனர். மேலும், பணிக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பணியிடத்தில் ஏற்படும் சவால்களையும் சமாளித்து வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது […]

நீங்கள் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, அதில் வெறும் ரூ.6.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்..? ஆம், இது மத்திய அரசின் கனவுத் திட்டமான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் சாத்தியமாகும். வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்குடன் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், புதிய தொழில்களைத் தொடங்க துடிக்கும் தொழில்முனைவோருக்கு, மிகப்பெரிய மானியம் வடிவில் நிதி உதவியை […]

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை […]

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 1983 குடியேற்றச் சட்டத்தைத் திருத்தத் தயாராகி வருகிறது, விரைவில் வெளிநாட்டுப் போக்குவரத்து (வசதி மற்றும் நலன்புரி) மசோதா, 2025 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மசோதா பழைய சட்டத்தை மாற்றும், மேலும் இந்திய வெளிநாட்டினருக்கு வெளிநாடுகளில் வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் விதிகளை எளிமைப்படுத்தும், பாதுகாப்பான மற்றும் நெறிப்படுத்தும். வெளியுறவு அமைச்சகம் ஒரு முழுமையான வரைவைத் தயாரித்து, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் அதை முன்வைக்கத் தயாராகி […]

9 வகுப்பு முதல் 12-, வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, பள்ளிகளில் ஆரம்ப கட்டத்திலேயே பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, ​​பருவமடைதல் மற்றும் பாலியல் நடத்தை குறித்த ஆரம்பகால விழிப்புணர்வின் அவசரத்தை எடுத்துக்காட்டும் வகையில் உச்சநீதிமன்றம் இந்த […]