நாட்டில் பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, கேஸ் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.. எல்பிஜி சிலிண்டரின் விலை சுமார் ரூ.950ஐ எட்டியுள்ளது, இது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சுமையாக உள்ளது.. கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பல்வேறு வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளுடன், கேஸ் சிலிண்டர் முன்பதிவுகளில் நீங்கள் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட், அதன் தகுதியான ஊழியர்களில் 80 சதவீதத்தினரின் சம்பளத்தை நவம்பர் 1 முதல் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க செயற்கை நுண்ணறிவின் வருகையால் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், நிறுவனங்கள் எதிர்காலத்திற்காக தங்களை மாற்றிக் கொள்கின்றன. இதற்கிடையில், ஒரு ஐடி நிறுவனத்தின் சுமார் 80 சதவீத ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளது. […]
நம் நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், தலைநகர் டில்லியில் நேற்று நடந்தது. செங்கோட்டையில், 12வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி ஆற்றிய […]
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அளித்திருந்தாலும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதாவது, நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பதிலாக 5% மற்றும் 18% என்ற இரண்டடுக்கு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தீபாவளிக்கு பிறகு […]
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் 80 வயதில் காலமானார். அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்ததில் இல. கணேசனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து சென்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். தியாகராயர் நகரில் உள்ள இல கணேசனின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த பாஜக மூத்த தலைவர் இல கணேசன் உடலுக்கு […]
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவின் மேற்கூரை இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. […]
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் உள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு அறையின் கூரை இன்று இடிந்து விழுந்தது.. இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பேட் ஷா தர்காவின் சுவருடன் கட்டப்பட்ட ஒரு கழிப்பறையின் கூரை இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த. 14 முதல் 15 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… கல்லறை கட்டமைப்பின் […]
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.. ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மத்திய ரயில்வேயில் உள்ள பயிற்சியாளர் (Apprentice) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உருவாகி உள்ளது.. இதில் மொத்தம் 2418 காலியிடங்கள் நிரப்பப்படும். ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் ஆகஸ்ட் 12, 2025 முதல் செப்டம்பர் 11, 2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் மற்றும் […]
கேரள மாநிலத்தை சேர்ந்த சஜு (24) என்பவர், திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக காத்திருந்த பெண்ணை, தனது வீட்டு வேலைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் சஜு பறித்துள்ளார். மேலும், பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகாரளித்த […]
கள்ளக்காதலை கைடுமாறு பலமுறை கண்டித்தும், மனைவி கண்டுகொள்ளாததால் அவரை கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்பா முகர்ஜி. இவருக்கு வயது 34. இவர், அந்த பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், […]

