டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முடிவை அறிவிக்கிறார்.. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இணங்காத நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று மிரட்டி இருந்தார். அந்த வகையில், 50 நாட்களுக்குள் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக தற்போது அச்சுறுத்தியுள்ளார். அதாவது, அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் […]

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஜூலை 11, 2006 அன்று, மேற்கு ரயில்வே பாதையில் மும்பையின் புறநகர் ரயில்களில் நெரிசல் நேரத்தில் 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டனர், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்ட […]

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.15,851 கோடி மதிப்புள்ள போலி உள்ளீட்டு வரி வரவை (ITC) ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 29% அதிகம். இருப்பினும், பிடிபட்ட போலி நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தது. 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 3,558 போலி ஜிஎஸ்டி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை […]

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள […]