மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகள் என உரிமை கொண்டாடி கேரள பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.. எம்ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த மகள் என்று கூறி கேரளாவை சேர்ந்த சுனிதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.. இந்த அடிப்படையில் அவர்களின் சொத்துகளில் எனது பங்கிற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நான் தான் ஜெயலலிதா – எம்.ஜி.ஆருக்கு பிறந்த […]

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் இறந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் நிபா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் இந்த வகை வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். […]

நீங்கள்புதிய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?. அப்போ, சொத்து பதிவு விதிமுறைகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து, நிலம் வாங்கத் திட்டமிடும் ஒவ்வொருவரும் இந்த புதிய விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிலம் அல்லது சொத்தை வாங்கும் போது பதிவு செய்வது ஒரு முக்கியமான சட்ட செயல்முறையாகும், இது சொத்தின் உரிமையை உறுதி செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் இந்த […]

ஜார்கண்டில் 800 மதுபான பாட்டில்களில் இருந்த சரக்கை எலிகள் குடித்துவிட்டதாக வர்த்தகர்கள் வினோதமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய மது கொள்கை செப்டம்பர் 1-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் […]

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இது குறித்து என்எம்சி செயலர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தங்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், வைப்புத் தொகை மற்றும் இதர கட்டண விவரங்களை கலந்தாய்வுக்கு முன்னதாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று […]

அசாமில் மனைவியுடன் விவாகரத்து ஆனதை கொண்டாடும் வகையில் 40 லிட்டர் பாலில் குளித்து மகிழ்ச்சியடைந்த கணவனின் வீடியோ வைரலாகி வருகிறது. அசாமின் நல்பாரி மாவட்டம் பரலியாபர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், அவரது மனைவி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது […]