தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7 இன்று கடைபிடிக்கப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, சிவப்பு இறைச்சி, சர்க்கரை சார்ந்த பானங்கள், ரொட்டி போன்ற சில உணவுகளை நாம் உட்கொள்கிறோம், அவை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. புற்றுநோய் ஒரு தீவிரமான நோய். சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். கடந்த காலங்களை விட இன்று புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், சில உணவுகளை உட்கொள்வது, […]

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) ஒரு முக்கிய அளவுகோலாக உள்ளது. இது, ஒரு மாவட்டத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தியை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் வெளியான 2024–25 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட முதல் 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் ரங்கா ரெட்டி : தெலங்கானாவின் ரங்கா […]

இந்தியாவின் பரபரப்பான நிதித் தலைநகரான மும்பை, 2025 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மகிழ்ச்சியான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், உணவு, இரவு வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் நகரங்களை மதிப்பீடு செய்த சமீபத்திய டைம் அவுட் கணக்கெடுப்பிலிருந்து இந்த தரவரிசை வந்துள்ளது. மும்பையைத் தொடர்ந்து, பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ஆசியாவின் முதல் ஐந்து மகிழ்ச்சியான நகரங்களில் தாய்லாந்தின் சியாங் மாய் […]

இனிமையான குரலால் பல ஆண்டுகள் இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகை சுலக்ஷனா பண்டிட், மும்பையில் நேற்று (நவ.6) காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர், தனது 71-வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை குடும்பத்தின் வாரிசு : சுலக்ஷனா பண்டிட், மிகச் சிறந்த இசைக் குடும்பப் பின்னணியை கொண்டவர். உலகப் […]

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் பிசியோதெரபிஸ்டுகள் (physiotherapists) மற்றும் தொழில் நுட்ப சிகிச்சையாளர்(Occupational Therapists) டாக்டர் என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுகாதார அமைப்பிற்குள் பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் தொழில் சிகிச்சையாளர்கள் ஒரு துணைப் பணிக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறுஇந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சங்கம் (IAPMR) மனு தாக்கல் செய்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் இந்த நிபுணர்கள் “டாக்டர்” […]

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் […]

தெலுங்கானாவில் மைர்மெகோபோபியா என்ற உளவியல் நிலையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் நகராட்சி பகுதியில் உள்ள சர்வா ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி மனிஷா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், மனிஷாவுக்கு மிர்மெகோபோபியா என்ற ஒரு தீவிரமான உளவியல் நிலை இருந்தது, இது எறும்புகளைப் பற்றிய தாங்க முடியாத பயத்தால் […]

இந்திய ரயில்வே ரயிலில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு பயணி ரூ.110 என விலை நிர்ணயிக்கப்பட்ட உணவு தட்டிற்கு (Thali) ரூ.130 செலுத்த மறுத்ததால், உணவக (catering) ஊழியர்கள் அந்தப் பயணியை கொடூரமாக அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வீடியோ பழையதாக இருந்தாலும், இந்த சம்பவம் பயணிகளிடையே கடும் கோபத்தையும், ரயில்வே உணவுப் பிரிவு முறைகேடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் […]

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் — சிலர் வேலைக்கு செல்கின்றனர், சிலர் சுற்றுலா செல்கின்றனர். கூட்டம் நிறைந்த சாதாரண பெட்டியிலிருந்து வசதியான ஏசி பெட்டிவரை, அனைத்து வகை பெட்டிகளிலும் எப்போதும் கூட்டம் நிறைந்ததாகவே கூறப்படுகிறது.. இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கிறது. ஆனால் இரவில் ரயிலில் பயணம் செய்யும் போது சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். […]

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள துனி பகுதியில் ஒரு தனியார் விடுதியின் உரிமையாளர் 10 வயது சிறுமியை ஒரு மாதம் முழுவதும் கொடூரமாக தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தங்களது மகளையும் மகனையும் துனி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் விடுதியில் படிக்கச் சேர்த்துள்ளனர். இந்த விடுதியை நடத்திய உரிமையாளர், […]