இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் அதன் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவுவதாகவும், ஆனால் எண்ணெய் பற்றாக்குறை இல்லை […]

மக்களவை எதிர்கட்சி தலைவருக்காக அரசு ஒதுக்கிய பங்களாவுக்கு மாற ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெல்லி துக்லக் லேன் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தவர் ராகுல் காந்தி. 2023 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் பதவியை இழந்த ராகுல்காந்தி பங்களாவை காலி செய்து விட்டு தாயார் சோனியா காந்தியின் No.10 ஜன்பத் இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர், நீதிமன்றம் […]

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மீள்குடியேற்ற இயக்குநரகம், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், சரக்கு போக்குவரத்து, நிர்வாகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த முகாம் இன்று டெல்லியில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மானெக்ஷா மையத்தில் காலை […]

சர்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ செயல்படுத்துவதற்கான விதிகளை மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் வரைவு செய்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது என்றும் இந்த விதிகள் 15-20 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை 21 முதல் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் அவற்றை வழங்க வழி வகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மையில் பெரும் மாற்றங்களைச் செய்வதை […]

மணிப்பூர் மக்கள் யாருமே அம்மண்ணில் தோன்றியவர்கள் அல்ல. ஆரம்ப காலத்தில், அண்டை தேசங்களில் இருந்து குடியேறிய மங்கோலிய இனக்கூறு உடைய மக்களே இவர்கள். இவர்களில், ‘மெய்தி’ என்றழைக்கப்படும் பழங்குடிகளே மூத்த குடிகள். அதாவது, முதலில் குடியேறியவர்கள். இவர்களுக்கு பின் குக்கிகள், அடுத்து நாகர்கள் மற்றும் பிற பழங்குடிகள் மணிப்பூருக்கு வந்து, ஆளாளுக்கு ஒரு பிராந்தியத்தில் வாழத் துவங்கினர். பவுத்த கலாசார பாரம்பரியம் உடைய மெய்தியினருடன் ஒப்பிடுகையில், குக்கிகள் முரட்டு குணம் […]

ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), myAadhaar போர்ட்டலில் ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 14, 2026 வரை நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான ஆதார் அட்டைதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 14, 2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. UIDAI தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த […]

கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண்கள், பெண்கள், உலகமறியாத பச்சிளம் குழந்தைகள் என பல உயிர்கள், இந்த கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், சமீபத்தில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் திருமணம் ஆன 36 நாட்களில், 22 வயது இளம்பெண் […]