சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் கண்ணிவெடித் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்தர் சரகத்தின் கீழ் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய என்கவுண்ட்டர் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கண்ணிவெடித் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜனவரி 17 […]

கர்நாடகாவின் துமகுரு மாவட்டம் நெலாஹால் அருகே தேசிய நெடுஞ்சாலை 48 இல் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. பெங்களூரை சேர்ந்த 6 பேரை ஏற்றிச் சென்ற மாருதி எர்டிகா, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கோகர்ணா, முருதேஷ்வர் மற்றும் உடுப்பிக்கு ஒரு பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த பயங்கர விபத்து நடந்தது, இது பரபரப்பான நெடுஞ்சாலைகளில் சோர்வு மற்றும் […]

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார். பின்னர் 77-வது குடியரசு தின […]

77வது குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி என்ன உடை அணிந்திருந்தார் என்பதையே பலரும் கவனித்துக் கொண்டிருந்தனர். பாரம்பரியம், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நவீன ஃபேஷன் ஆகியவற்றை அவர் ஒருங்கிணைத்த தோற்றம் அனைவரின் பார்வையையும் கவர்ந்தது. முக்கியமாக கவனம் பெற்றது அவரது ராஜஸ்தானி தலைப்பாகை அதாவது டர்பன். அதில் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருந்தது. மேற்கு இகிந்தியாவில் இந்த நிறங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும். […]

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சேவைகள் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் […]

ராஜஸ்தானின் நாகூரில் ஒரு 58 வயது நபரின் வீட்டிலிருந்து 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்ததையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மிருதுல் கச்வா இதுகுறித்து பேசிய போது “ எங்களுக்கு கிடைத்த சில ரகசியத் தகவல்களின் அடிப்படையில், நாகூர் காவல்துறையின் ஒரு சிறப்புப் படை, ஞாயிற்றுக்கிழமை நாகூரின் தான்வ்லாவில் உள்ள குற்றவாளி சுலைமான் கானின் வீட்டில் சோதனை […]

ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் ஸ்நேஹா பட்நாயக் (22) என்ற மாணவியின் விவகாரம், தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஓராண்டிற்கும் மேலாக தனது கல்லூரி பேராசிரியரான டாக்டர் விக்ரம் மிஸ்ராவுடன் ஸ்நேஹா ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணமான விக்ரம், ஸ்நேஹா கர்ப்பமான செய்தியை அறிந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்து ஒதுங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட அச்சமும் அவமானமும், […]

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]

சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், தனது நிர்வாக கட்டமைப்பை அதிரடியாக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் (Streamline), தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் சுமார் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி 27-ஆம் தேதி முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகால அமேசான் வரலாற்றில் இல்லாத வகையில், சுமார் 30,000 […]

கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலத்தில் பலரது பாக்கெட்டுகளில் இருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவர் பயன்படுத்திய கடனுக்கு யார் பொறுப்பு? அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் ஒரு விரிவான அலசலை இங்கே காண்போம். குடும்பத்தினர் […]