மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் […]

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 – செப். 30ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும். எம்.பி.பி.எஸ் ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் […]

பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமார் 1,000 பேரை சந்தேகத்தின் பேரில் டெங்கு பரிசோதனைக்கு அனுப்பியதாகவும், அதில் 900 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தற்போது […]

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். பப்ஜி கேம் விளையாடுவதில், மிகுந்த ஆர்வம் கொண்ட சீமாவுக்கு, அதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி நேபாளம் வழியாக இந்தியா வந்தார். பின்னர், சச்சினும் சீமாவும் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலனை, எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து 2.35 மணிக்கு விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 179 கிமீ நீள்வட்டப்பதையில் சந்திராயன் 3 நிலை நிறுத்தப்பட்டது. எல்.வி.எம் 3 எம்4 S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில். சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. சந்திராயன் 3 […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தேசிய ஓய்வூதிய திட்டம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பிறகு அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.. 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தனியார் துறை ஊழியர்களும் இந்த திட்டத்தில் கணக்கு […]

நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு நிலவுவதால் இன்னும் சில வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. முறையற்ற பருவமழை, போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக பல மடங்கு உயர்ந்துள்ளது. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையானது. இது ஒரு புறம் இருக்க தக்காளியை பெருமளவு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை […]

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பரிபாடா பகுதியைச் சேர்ந்த மதுஸ்மிதா என்ற இளம்பெண் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின்னர் அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்துக்கு இறுதி மரியாதைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்ததும், எரியூட்ட தகன மைதானத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. பின்னர் கிராம மக்கள் சூழ அந்த […]

தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது. நேற்றும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்தது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. ஆனாலும், யமுனை ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Joint General Manager / Deputy General Manager பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள், RPF அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். […]