பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும். இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
இந்தியாவின் மூலம் இதுவரை 424 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு, அதில் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் 389 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள்களை செலுத்தியதன் மூலம் கிடைத்த 174 மில்லியன் அமெரிக்க டாலர்களில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 157 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதேபோல், 256 மில்லியன் யூரோ வருவாயின் மோடி அரசின் ஒன்பது […]
AI தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கை உண்மையாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ச்சியைப் பெறும். கடந்த காலங்களில் கணினி, மொபைல் எனப் பல சாதனங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆனது என்றே சொல்லலாம். இது டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வருகிறது.. ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடிக்கு […]
பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் ஆபத்தான SpinOK எனப்படும் மொபைல் ஸ்பைவேரை அடையாளம் கண்டுள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ‘SpinOK’ எனப்படும் புதிய மற்றும் மிகவும் ஆபத்தான மொபைல் ஸ்பைவேரை அடையாளம் கண்டுள்ளனர். இந்த தீங்கிழைக்கும் ஸ்பைவேர் Google Play Store இல் காணப்படும் 101 ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. இது மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களின் தரவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.டாக்டர் வெப், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ப்ளீப்பிங் கம்ப்யூட்டருடன் இணைந்து […]
நேஹா என்ற பெண், தனது எல்.கே.ஜி (LKG) தோழியான லக்ஷிதாவைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தனி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கினார். தான் பார்க்க விரும்பும் குழந்தைப் பருவத் தோழியின் முழுப் பெயரைக்கூட அவரால் நினைவுகூர முடியவில்லை. அந்தக் கணக்கிற்கு @finding_Lakshita என்று பெயரிட்டு தன்னிடம் இருந்த ஒரே ஒரு குழந்தைப்பருவ ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பயோவில் தன் தோழியைப் பற்றி சில தகவல்களையும் குறிப்பிட்டிருந்தார். “நீண்டகாலத்துக்கு முன் தொலைந்து போன என் […]
மெடா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, பயனாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து புதிய பிரச்னை சமீபத்தில் வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களுக்கு அழைப்பு வருகிறது. குறிப்பாக […]
கடந்த 5 ஆண்டுகளாக 6,35,000 பேரின் பான் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்தி அதன் மூலம் 2,660 போலி நிறுவனங்களை உருவாக்கி, பல கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரியை ஏமாற்றி வந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மொத்த வரி ஏய்ப்பு தொகையை இன்னும் கண்டறியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ரூ. 10,000 கோடிக்கு மேல் இருக்கும் […]
தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தால், பெண் ஒருவர் இரண்டு முறை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா குஸ்மன் கார்சியா லூனா என்ற ஊழியர், மெட்டா நிறுவனத்தில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், வேலை இழந்த துக்கத்தில் 2 மணிநேரம் தொடர்ந்து கதறி அழுததாகத் தனது லிங்க்கெட்ன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மாதங்களில், எனது 8 […]
ஆதார் நிர்வாகக் குழுவான UIDAI, மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்திய மக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14ம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக ஆதாரை புதுப்பிக்க ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜூன் 14 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்துக் […]
யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில் (Youtube), ஸ்டோரீஸ் என்ற வசதி கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் யூடியூப் பயனர்கள் தாங்கள் என்ன வீடியோவை பதிவேற்றுகிறோம் என்பதை, முன்னோட்டமாக அறிவிப்பதாக ஸ்டோரீஸ் என்ற வசதி பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டிருக்கும், யூடியூபர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக […]