பிரதமர் நரேந்திரமோடியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது. அதே போன்ற ஒரு கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட 24 முக்கிய […]

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத்துக்கான விமான டிக்கெட் கட்டணம் தற்போது 350% வரை உயர்ந்துள்ளது. ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டி, இறுதிப் போட்டி மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி […]

பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அனல் தெறிக்கும் வெப்பத்தில் இருந்து ஒருவகையில் நமக்கு நிவாரணம் கிடைத்தாலும், இந்த மழைக்காலங்களில் புதிய சவால்கள் தேடி வருகின்றன. பல யோசனைகளுக்கு பிறகு ஆசையாக எலெக்ட்ரிக் பைக் வாங்கியிருப்பீர்கள். இந்தக் காலத்தில் உங்களது எலெக்ட்ரிக் பைக்கை மழையில் நனையாதவாறு பாதுகாக்க சில டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம். வாட்டர் புரூஃப் கவர்கள் : உங்கள் எலெக்ட்ரிக் பைக்கின் வடிவமைப்பிற்கு ஏற்ற வாட்டர் புரூஃப் கவர்களாக பார்த்து […]

நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்ப்பூரில் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி அவருடைய காதலன் முன்னிலையில், 3 கல்லூரி மாணவர்களால் கொடூரமான முறையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 3 குற்றவாளிகள் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தன்னுடைய சொந்த ஊரான ஜோத்பூரில் நடைபெற்ற […]

புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது என்பது குறித்த பல சுவாரஸியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார் என்றபோதிலும், […]

சாலைகளில் வாகன விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு 10,000 ரூபாய் வெகுமதி அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த உதவிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாயுடன், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக 5,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த தொகையை பெற, சாலை விபத்தில் சிக்கியவர்களை கோல்டன் ஹவர் எனப்படும் கால அளவில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும். […]

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால், கடக மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று விவசாயிகள் அடி கோலுகின்ற சிறப்புமிக்க மாதம் ஆடி மாதம்தான். அத்தகைய ஆடி மாதம் இந்தாண்டு ஜூலை 17 ஆம் தேதியான இன்று பிறக்கிறது. அத்துடன் இன்று அமாவாசையும் சேர்ந்து வருகிறது. இந்த ஆடி மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இருக்கும். […]

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி […]

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான காது கேளாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புகைப்பிடித்தல் என்பது பல்வேறு கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். ஆனால் புகைப்பிடிப்பதால் செவித்திறன் இழப்பு ஏற்படுவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. புகைபிடித்தல் மற்றும் காது கேளாமை ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான […]

பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் […]