10 வருடம் ஒரு வீட்டில் குடியிருந்தால், அந்த வீடு வாடகைதாரருக்கு சொந்தமாகிவிடுமா? வாடகைதாரருக்கும் சட்டம் உள்ளதா? அந்த சட்டம் என்ன சொல்கிறது? எத்தனையோ பேர், தங்கள் குழந்தைகளின் படிப்புக்காகவும், வேலைக்காகவும், சொந்த ஊர்களை விட்டுவிட்டு வெளியூர்களில் குறிப்பாக பெருநகரங்களான சென்னை, கோவை போன்ற இடங்களில் குடியேறிவிட்டனர். இந்த குடியேற்றங்கள் இப்போதும் தொடர்ந்து வருகிறது. வாடகை வீடு என்றாலும்கூட, இதற்கும் சட்டங்கள் உள்ளன. சில உரிமைகளும் உள்ளன. இவைகளை நாம் அறிந்து […]

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ‘ வழங்கப்படும் எனவும் அது தொடர்பாக வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி பயனுள்ள ஒருவரும் கலைஞர் […]

பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31, ஜூலை 2023-ல் இருந்து ஆகஸ்ட் 31,2023-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகள், 2024-ற்கான விண்ணப்பங்களின் பதிவு தேசிய விருதுகள் இணையதளத்தில் (https://awards.gov.in, ) தற்போது தொடங்கியுள்ளன. இவ்விருதுகள் வீர தீரம், விளையாட்டுக்கள், சமூகசேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதுமைக் கண்டுபிடிப்புகள் […]

IRCTC சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான பேக்கேஜ்களையும் வழங்குகிறது. இந்நிலையில், லே லடாக்கிற்கான பேக்கேஜ் விபரத்தை அறிந்து கொள்ளலாம். லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவால் நிர்வகிக்கப்படும் ஒரு பகுதி மற்றும் பெரிய காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இது வடக்கில் காரகோரம் மலைத்தொடர் மற்றும் தெற்கில் இமயமலையால் எல்லையாக உள்ளது. 11,400 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, சிகரங்கள் மற்றும் தரிசு நிலப்பரப்புடன் கூடிய உயரமான கணவாய்களின் நிலம் […]

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் CE 02 மின்சார மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ (BMW) ஆனது கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற நிறுவனமாகும். இது ஆடம்பர வாகனங்களுக்கு பெயர் பெற்றது மற்றும் வாகனத் துறையில் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். தற்பொழுது, வளர்ந்து வரும் மின்சார வாகன […]

தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் எந்தெந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்தெந்த நேரத்தில் வரும், எந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்களை செல்போனிலேயே அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசு செய்கிறது. தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அரசு பஸ்களை இயக்கி வருகிறது. சிறு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு […]

தமிழ்நாட்டில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்துவதால் இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து […]

தமிழ்நாட்டில் இன்று பதிவுத்துறைக்கான சேவைக் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதால், வீடுகள், மனைகளின் விலையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, பதிவுத்துறை சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “ரசீது ஆவணத்திற்கான பதிவுக்கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையிலான செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயில் […]

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கண்பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருட்களை பார்ப்பதில் குறைபாடு உள்ளதா, கண்கள் சிவந்துள்ளதா, புத்தக வாசிப்பில் வரிகளை தவற […]

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டது. இது விரிவான பகுப்பாய்வுக்கான குறியீட்டின் மூலம் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வியின் செயல்திறனை மதிப்பிடுகிறது. சுமார் 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த சுமார் 26.5 கோடி மாணவர்கள் என பலதரப்பட்ட சூழலைக் கொண்ட […]