பற்களின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க, தினமும் சரியான முறையில் பல் துலக்குவது மிகவும் அவசியம். குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது நல்ல பழக்கமாக பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காரணம், இரவு முழுவதும் தூங்கும் நேரத்தில் உமிழ்நீர் சுரப்பு குறைவதால், வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்து பற்களின் மேற்பரப்பில் பற்காரை உருவாகத் தொடங்குகிறது. எனவே, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது இந்த பாக்டீரியாக்களை அகற்றி, வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. […]

இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி, முழங்கால் வலி, மூட்டு விறைப்பு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் வயதானவர்களை மட்டுமல்லாமல் இளம் வயதினரையும் அதிகமாக பாதித்து வருகின்றன. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, உடல் எடை அதிகரிப்பு மற்றும் சத்தான உணவுகள் குறைவாக உட்கொள்வது போன்ற காரணிகள் இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், சரியான உணவுப் பழக்கவழக்கங்களையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றுவதன் […]

எவ்வளவு நேரம் தூங்கினாலும் உடல் புத்துணர்ச்சி இல்லாமல் சோர்வாகவே இருப்பதாக பலர் கூறுவார்கள். இதற்கு வைட்டமின் குறைபாடுதான் ஒரே காரணம் என்று நினைப்பது தவறு. உண்மையில், நீடித்த சோர்வுக்குப் பின்னால் பல்வேறு உடல்நலக் காரணங்கள் இருக்கலாம். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சோர்வை ஏற்படுத்தும் காரணங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை சரியான சிகிச்சையின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். மற்ற சிலவற்றை கட்டுப்பாட்டில் வைத்தே வாழ வேண்டிய நிலை ஏற்படலாம். குணப்படுத்தக்கூடிய […]

தினமும் ஒரே மாதிரியான புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தேங்காய் சாதம் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கறிவேப்பிலை மசாலா சாதத்தை ஒருமுறை செய்து பாருங்கள். வழக்கமான வெரைட்டி ரைஸ்களிலிருந்து சற்று வித்தியாசமான இந்த உணவு, மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும். இதில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் காரணமாக, பிரியாணியைப் போன்ற தனித்துவமான சுவை கிடைக்கும். அதே நேரத்தில், கறிவேப்பிலையின் சத்துக்களும் முழுமையாக கிடைப்பதால், இது […]

வெள்ளி கொலுசு மற்றும் மெட்டி போன்ற நகைகள் சில நாட்கள் பயன்படுத்திய பிறகு கருமை படர்வது இயல்பான ஒன்றுதான். குறிப்பாக வியர்வை, ஈரப்பதம் மற்றும் தினசரி பயன்பாடு காரணமாக அவற்றின் பளபளப்பு குறைந்து விடும். ஆனால் வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை பயன்படுத்தியே அவற்றை மீண்டும் புதிதுபோல் மின்னச் செய்யலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து […]

ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் பல வீடுகளில் காலையுணவாக இருந்தது பழைய சாதம். முந்தைய நாள் மீதமிருந்த சாதத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடும் இந்த வழக்கம், இன்று மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நொதித்த (Fermented) உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பழைய சாதத்தின் ஊட்டச்சத்து குறித்தும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பாரம்பரிய உணவு உடலுக்கு என்னென்ன நன்மைகளை […]

பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். அதற்காக விலையுயர்ந்த அழகுப் பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்களும் ஏராளம். ஆனால், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கவும், அதன் இயற்கையான பொலிவை மேம்படுத்தவும் முடியும். அந்த வகையில், எளிதாக தயாரிக்கக்கூடிய சில வீட்டுவழி ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். வெயிலின் தாக்கம், மாசு, […]

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலை உணவாக மட்டுமல்லாமல் இரவு உணவாகவும் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் சாப்பிடப்படுகிறது. இதற்காக அடிக்கடி வீட்டில் மாவு அரைப்பது நேரம் எடுக்கும் என்பதால், இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலரும் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் பாக்கெட் மாவை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், தனியாக வசிக்கும் இளைஞர்கள், நேரம் குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு பாக்கெட் மாவு மிகவும் வசதியான தேர்வாக […]

பூண்டு மற்றும் தேன் இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை உணவுகளாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும். இதை தயாரிக்க, தேவையான அளவு பூண்டுப் பற்களை தோல் நீக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அவை முழுவதும் மூழ்கும் அளவிற்கு தூய தேனை ஊற்றி, குறைந்தது 24 மணி நேரம் ஊறவைக்கலாம். அதன் பிறகு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் […]

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கண்களை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக பெண்கள், தனது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். ஆனால், அது தனக்கென்று வரும்போது, மிச்சம் மீதிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்காகவே உழைத்து கடைசி வரை வாழ்ந்து விடுவார்கள். இதனால்தான், பல பெண்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுகிறார்கள். […]