உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அவற்றை எதனுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதும் அதே அளவு முக்கியமானது. மருந்துகளை தண்ணீருக்கு பதிலாக டீ, காபி, குளிர்பானம் அல்லது பழச்சாறுடன் உட்கொள்ளும் பழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. இது சில மருந்துகளின் செயல்திறனை பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, காபி மற்றும் டீயில் உள்ள கஃபீன் சில மருந்துகளுடன் சேரும்போது உடலில் எதிர்பாராத விளைவுகளை […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
காலை உணவில் முட்டையை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையா அல்லது தீமையா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் அதிகளவில் கொலஸ்ட்ரால் இருப்பதால், அதைச் சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்து என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. இதன் காரணமாகவே, உடல்நலத்தில் அதிக அக்கறை கொண்டவர்களும் முதியவர்களும் மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த நம்பிக்கையை மறுபரிசீலனை […]
வீடுகளில் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பெரும்பாலானோர் ஃப்ரிட்ஜ் கதவில் இருக்கும் பிரத்யேக முட்டை டிரேயில்தான் அவற்றை வைக்கிறார்கள். வசதிக்காக செய்யப்படும் இந்தப் பழக்கம், முட்டையின் தரத்தை பாதிக்கக்கூடும் என உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃப்ரிட்ஜ் கதவு அடிக்கடி திறக்கப்பட்டு மூடப்படுவதால், அந்தப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த வெப்பநிலை மாற்றம் முட்டைகளின் தரத்தை விரைவாகக் குறைக்கக்கூடும். குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு […]
சமையலறையை சுத்தமாக வைத்திருக்க பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சை தினமும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அதே ஸ்பாஞ்சை நீண்ட நாட்கள் மாற்றாமல் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்பாஞ்ச் எப்போதும் ஈரப்பதமாக இருப்பதால், அதில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மிக வேகமாக பெருகும் வாய்ப்பு உள்ளது. பாத்திரங்களில் இருக்கும் உணவுத் துகள்கள் ஸ்பாஞ்சில் ஒட்டிக்கொள்வதால், கிருமிகள் வளர ஏற்ற சூழல் உருவாகிறது. இதனால், சுத்தம் செய்கிறோம் […]
தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாதத்தில் பெய்த பரவலான மழை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மழைப்பொழிவு கணிசமாக குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சராசரி மழைப்பொழிவு 254.9 மில்லிமீட்டராக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் வழக்கமான அளவில் 94 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த […]
தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசின் ஒரு ரூபாய் வருவாயில் எந்தெந்த துறைகளிலிருந்து எவ்வளவு பணம் கிடைக்கிறது மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயை கணக்கிடுகையில், அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாயில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாகவே பெறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, 33.1 சதவீதம் […]
உலகளாவிய வர்த்தக நகர்வுகள் மற்றும் இறக்குமதி வரிக் கொள்கைகள் காரணமாக தங்கத்தின் சந்தை விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்து நகைப் பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5)இரண்டு முறை உயர்வை சந்தித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 4) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,600-க்கும், ஒரு […]
குழந்தைகள் கையில் கொடுக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அதனுடன் வரும் சிறிய பரிசுப் பொருட்கள் குறித்து பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கண நேர அலட்சியம்கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதை கர்நாடகாவில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது ஒரே மகனான முகுந்த் மயூர், சிப்ஸ் […]
குழந்தை புத்தகத்தை எடுத்தவுடன் சில நிமிடங்களிலேயே கவனம் சிதறிவிடுகிறதா? படிக்க உட்கார்ந்தாலும் மனம் வேறு விஷயங்களில் செல்கிறதா? இது பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. ஆனால், இதற்காக குழந்தையை திட்டுவதோ அல்லது மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதோ தீர்வாக இருக்காது. குழந்தையின் படிப்புத் திறனை விட, அதன் கவனத்தை பாதிக்கும் காரணங்களை முதலில் கண்டறிவதே முக்கியம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதிக […]
டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான வகைகளை, மது பிரியர்கள் மொபைல் போன் செயலியில் தேர்வு செய்து, பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, வாங்கி கொள்ளும் திட்டத்தை, டாஸ்மாக் நிர்வாகம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 4,048 டாஸ்மாக் கடைகள் மூலம் பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளுக்கு, மது பிரியர்கள் நேரில் சென்று, மதுபானங்களை வாங்க வேண்டும். பல கடைகளில், மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மது […]

