சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் சிறுநீர் அதிகம் செறிவடைவது முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடலில் சேரும் சில தாதுக்கள் சிறுநீரில் அதிக அளவில் குவியும்போது, அவை படிப்படியாக படிகங்களாக மாறி கற்களாக உருவாகலாம். இதனால், அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீர்ச்சத்து […]

திருமண வாழ்க்கையில் ஒருவர் வேறு ஒரு நபருடன் உறவு வைத்திருப்பது என்பது திடீரென நிகழும் ஒரு சம்பவமாக மட்டுமே பார்க்க முடியாது. பல நேரங்களில், அதற்கு முன்பே உறவில் உருவாகும் உணர்வுப்பூர்வமான இடைவெளி, தனிமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத நிலை உள்ளிட்ட பல காரணிகள் பின்னணியில் இருக்கலாம். குறிப்பாக, குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போவது குறித்தும் இந்த விவாதம் கவனம் […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பிரிவில் 41 இடங்களும், குரூப்-2A பிரிவில் 780 இடங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். முதல்நிலைத் […]

சந்திரன் இன்று சூரியனை முழுமையாக மறைத்து, பகல் நேரத்தை இரவு போல மாற்றவுள்ளது. இயற்கையின் மிக அரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த ‘முழு சூரிய கிரகணம்’, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமையவுள்ளது. புதன்கிழமை இன்று, வடக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. ஒரு குறுகிய பாதையில் பகல் நேர வானம் இருளாக மாறும் இந்த அபூர்வ நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் […]

ஒரே அறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஒருவர் கூட மற்றவர்களுடன் பேசுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களை அருகில் இருப்பவர்களாகக்கூட கவனிக்காத இந்தக் காட்சி, தற்போது பல குடும்பங்களில் சாதாரணமாக மாறி வருகிறது. குறுகிய நேரத்தில் பொழுதுபோக்கை வழங்கும் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்கள், நேரத்தை கடத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். ஆனால், ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்த […]

ஒரு உறவில் அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தம்பதியிடையேயான நெருக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவன் – மனைவிக்கு இடையேயான நல்ல நெருக்கம் அவர்களின் உறவை வலுப்படுத்துவதோடு, மனநிலை மற்றும் உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில், உறவில் நெருக்கம் குறைந்தால் கோபம், எரிச்சல், மன அழுத்தம் மற்றும் சோகம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹைதராபாத் யசோதா […]

சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு (Prediabetes) உள்ளவர்கள் பொதுவாக சாதம், ரொட்டி, பிரெட், இனிப்பு போன்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் ஊறுகாய், அப்பளம், சட்னி போன்ற சிறிய துணை உணவுகள் குறித்து பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. உணவின் சுவையை அதிகரிக்கும் இந்தப் பொருட்கள், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, ஊறுகாய், […]

அமாவாசை என்றாலே நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வழிப்படக்கூடிய ஒரு முக்கியமான நாள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய அமாவாசை தினம், மாதம் மாதம் வந்தாலும் இந்த மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அது தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசியில் வரும் அமாவாசை ஆகும். இதில் முதலாவதாக வருவது தட்சிணாயன காலமான […]

இந்தியாவில் பாலில் கலப்படம் செய்வது நீண்ட காலமாகவே முக்கிய உணவுப் பாதுகாப்பு பிரச்னையாக இருந்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் சோதனைகளில், நுகர்வோரின் உடல்நலத்தையும், பால் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் பல்வேறு கலப்பட முறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செயற்கை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பால் தயாரிக்கப்படுவதாக மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. FoodPharmer-க்கு அளித்த […]

LPG Gas | வீட்டு சமையல் எரிவாயு பயனாளிகள் ஆதார் வாயிலாக உண்மைத் தன்மையை சரிபார்க்க தவறினால், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்று பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு […]