டேட்டா ஸ்கிராப்பிங், தகவல் ஆளுகைக்காக பயனர்களுக்கு தற்காலிக வரம்புகளை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் (Verified Accounts) ஒரு நாளைக்கு 10,000 பதிவுகளையும், பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். முதலில், சரிபார்க்கப்பட்ட கணக்கு […]

ஊடகத் துறையில் அச்சுப் பதிப்பு மூலம் வெளிவந்த நாளிதழ்கள் நிறுத்தப்பட்டு, அவை டிஜிட்டல் வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கடந்த காலங்களில் பல நீண்டகால பத்திரிகைகள் தனது அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் 320 ஆண்டுகள் பழைமையான ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாளும் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளது. வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்டு ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாள் வெளியாகி வந்தது. […]

பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் தனது வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் சுடப்பட்டது பிரான்ஸ் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துள்ளது. நான்டெர்ரேயின் அவென்யூ ஜோலியட்-கியூரி என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் காவல்துறையினர் மேல் ஏற்றுவது போல் சென்றார். […]

பலாத்கார வழக்கில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி வழக்கு இப்போது நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி. அந்த அணியின் டிஃபென்டராக இருக்கும் பெஞ்சமின் மெண்டி நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளார். இவர் மீது ஒரு பலாத்காரம் மற்றும் ஒரு பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு […]

“எலித் தொல்லையால் தவித்த ஒரு நகரத்தைக் காப்பாற்ற மாயக் குழல் இசைப்பவர் ஒருவர் வந்தார். அவர் தெருவில் குழல் இசைத்தபடி நடக்க, நகரில் இருந்த எலிகள் அவர் பின்னால் வந்தன. எல்லா எலிகளையும் அவர் ஆற்றில் இறக்கி அழித்தார்” என்கிற கதையை பலர் படித்திருப்பீர்கள். எலிகளை மட்டுமல்ல, அதுபோல பல்கிப் பெருகும் பல வகை அந்நிய வேட்டை விலங்குகளை 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து முற்றிலுமாக அழித்துவிட திட்டம் தீட்டி […]

ஜூன் மாதம் மெக்சிகோவில் கடுமையான வெப்பநிலை காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. இதன் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட வெப்பம் சார்ந்த நோய் அறிகுறிகளுடன் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மெக்ஸிகோ நாட்டு சுகாதாரத் துறைச் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவிவரும் கடும் வெயில் […]

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி ஸ்னூக்கர் வீரர் மஜித் அலி (28). ஆசிய அளவில் ஸ்னூக்கர் போட்டிகளில் பங்குபெற்று 21 வயதுக்குட்பட்டோருக்கான வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல சர்வதேச நிகழ்வுகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், தேசிய சர்க்யூட்டில் முதல் தரவரிசை வீரராக இருந்து அசத்தியுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டிலேயே மரம் வெட்டும் கருவியால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுவயதிலிருந்தே அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்துவந்த அவர், தற்போது தற்கொலையில் […]

எகனாமிக் டைம்ஸ் செய்தியின் படி, ஜியோமி இந்தியா நிறுவனமானது கடந்த இரண்டு நிதி காலாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு மொபைல் சந்தையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவரவும் ஊழியர்களை மறுசீரமைக்கவும் இந்த பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் Xiaomi இந்தியா நிறுவனத்தில் 30 பணியாளர்கள் தங்களுடைய வேலையை இழந்தனர். கூடிய விரைவில் மேலும் […]

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அதன்படி வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் ஜூலை 1 முதல் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. குப்பை வீட்டிலிருந்து தான் வீசப்பட்டது என்பதை […]

குப்பைகளை குப்பைதொட்டியில் போடாமல் தூக்கி எறிபவர்களுக்கு இன்றுமுதல் அபராதமும், தண்டனையும் விதிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அவ்வாறு, நாளை முதல் (ஜூலை 1) வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது […]