பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அப்போது பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை இந்தியா விதித்தது. அதில் ஒன்று தான் பாகிஸ்தான் கப்பல்கள் இந்தியா வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் துறைமுகத் தடை, முழுமையான தளவாட நெருக்கடியாக மாறி வருகிறது.. இது இறக்குமதி காலக்கெடுவை 50 நாட்கள் வரை நீட்டித்து, பாகிஸ்தானின் ஏற்கனவே பலவீனமான வர்த்தகப் பொருளாதாரத்தில் செயல்திறனை குறைத்துள்ளது. இந்த நடவடிக்கையை […]

காசாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 85 பேர் பலியாகினர். காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் நேற்று கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன. காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா […]

ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, திடீரென வீசிய பலத்த காற்றால் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியில் வந்த விமானம், தற்காலிகமாக திசைதிருப்பப்பட்ட போதிலும் பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது. இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரும் விமான விபத்து தற்காலிகமாக […]

ஓஹியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓஹியோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையம் அருகே ஆறு பேருடன் செஸ்னா 441 விமானம் மொன்டானாவின் போஸ்மேனு சென்றுக்கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் […]

கோவிட் தொற்றின் புதிய மாறுபாடு காரணமாக தற்போது நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒரு வகைக்கு NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இது சில அசாதாரண அறிகுறிகளைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் விரைவான விகிதத்தில் பரவுகிறது. இந்த புதிய மாறுபாட்டின் பயங்கரமான அறிகுறிகள் இருந்தபோதிலும், WHO மற்றும் CDC போன்ற சுகாதார அமைப்புகள், பெரும்பாலான மக்களிடையே மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. […]

ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும். இந்தநிலையில், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் […]

பேருந்து மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 22 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். நேற்று காலை இந்த பேருந்து அஷ்மொன் பகுதியில் சென்ற போது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் […]