கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ்(27) என்பவர். இவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார். மனைவி ஞானமலர்(21). இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் மகனும், 9 மாத ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த விவசாயி தங்கராஜ்க்கும்(28) சில காலங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாதேஷ், மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இதனை ஞானமலர், தங்கராஜிடம் கூறிய நிலையில், குழந்தைகள் […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் செங்குளத்துப்பட்டியில் 4 வயது சிறுமி சூடு வைத்து துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பெயரில் புகார் மேற்கொள்ளபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறுமியை வளர்த்த ராஜேஷ் குமார் மற்றும் கீர்த்திகா என்ற தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது . […]
கரூர் மாவட்ட பகுதியில் குளித்தலைக்கு அருகே பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் வசந்தா. இவரது கணவர் பழனிச்சாமி. கணவர் தோகைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக ஜெ.பேரவையில் செயலாளராக இருந்து வருகிறார். மருதைவீரன் என்பவர் குளித்தலையில் இருக்கும் டிஎஸ்பியிடம் பழனிச்சாமியின் பேரில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், பழனிச்சாமியிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்று வந்த நிலையில் சில நாட்களாக கந்துவட்டியை கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து, ஆபாச வார்த்தைகளால் […]
அமெரிக்காவில் பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா பகுதியில் பிறந்தவர் ஆரன் கார்ட்டர் (வயது 34). இவருக்கு நிக் கார்ட்டர் என்ற சகோதரரும், 3 சகோதரிகளும் இருக்கின்றனர். தனது 9 வயதில் 1997ஆம் ஆண்டு முதல் ஆல்பம் ஒன்றை ஆரன் கார்ட்டர் வெளியிட்டார். ’பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்’ என்ற பாப் இசை குழுவுடன் ஒப்பந்தம் […]
தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ள நிலையில், டீ – காஃபி விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என […]
இலங்கையின் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா, என்பவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் பாதிலேயே குணதிலகா விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக இலங்கை அணியில் அஷேன் பண்டாரா என்பவர் அணியில் சேர்க்கப்பட்டார். காயம் ஏற்பட்ட போதிலும் அவர் இலங்கைக்கு திரும்ப செல்லாமல் தனது அணியுடனேயே இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் நேற்று தினத்தில் சிட்னியில் நிகழ்ந்த ஆட்டத்தில் இலங்கை அணி […]
அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் பனைத்தொழிலாளி ராஜலட்சுமி(42). வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த இருவர் ராஜலட்சுமி போட்டிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த குடும்பத்தினர் காரில் திருடர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 10 கிமீ தூரம் வரை துரத்தி சென்ற நிலையில், டூவீலரை போட்டு […]
டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 1 லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குரூப் 2லிருந்து அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை வீழ்த்தினால் போதும் என்ற சூழலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து இடையேயான போட்டி இன்று அடிலெய்டில் […]
புதுச்சேரி மாவட்ட பகுதியில் மோந்தெர்ஷியே வீதியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வும் பெற்றவர். கடந்தாண்டு இவரது மனைவி இறந்துவிட்டதால், குழந்தைகளும் பிரான்சில் வசிப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள தகுதியான ஒருவரை தேடி வந்துள்ளார். வேணு வீட்டின் முதல்தளத்தில் நிருபர் என்று கூறி வாடகைக்கு ரவிசங்கர் (29) என்பவர் குடியிருந்தார். அவரிடம் தனக்கு மறு மண ஆசை இருப்பதை […]