அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அமைந்தகரை சேர்ந்த 60 வயதான முருகானந்தம் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அந்தப் பெண் தனியாக இருந்த நிலையில், குடிபோதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் வாரம் நட்பு.. அதன் பின் வஞ்சகம்… தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பல பேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் […]
ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் விதிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மேற்கொண்டு வருகின்றது. மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும், விதிகளை எளிமைப்படுத்துதல் தேவையற்ற பொருட்கள் மற்றும் தரவுகளை அப்புறப்படுத்தும் வகையிலும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு […]
’கதை சொல்லும் நேரம்’ டாஸ்கில் ஜிபி முத்துவே அவர் கதையை சொல்ல முடியாமல், பஸ்சரை அடிக்க சொன்ன வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் ஆக “கதை சொல்லும் நேரம்” கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிசை எண் படி கதை சொல்லலாம். லிவிங் ஏரியாவில் 3 பஸ்சர்கள் வைக்கப்பட்டிருக்கும். அதன்படி போட்டியாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்கள் 60 […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,119 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
EMI மூலம் செல்போன் வாங்கியதை கணவன் மறைத்ததால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்ஹேய் – ஜோதி மண்டல் தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மனைவிக்கு கணவர் கன்ஹேய் புதிதாக செல்போன் ஒன்றை பரிசாக கொடுக்க நினைத்துள்ளார். இதனால், மனைவிக்கு பிடித்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை அதிகமாக […]
திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக (Suspension) நீக்கி வைக்கப்படுகிறார்’ என தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் […]
Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Buyer, Buyer மற்றும் MPL பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் Buyer, Buyer மற்றும் MPL பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் […]
மகளின் தற்கொலைக்கு காரணமான காதலனை கொலை செய்து சமாதி அருகே தந்தை புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் துவாரகா திருமலை மண்டலம், ஐ.எஸ்.ராகவபுரம் ஊராட்சி துர்ல லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தனிகடப்பா பவன் கல்யாண் (24). இவரும் ராமசிங்கவரம் ஊராட்சி கொடுகுப்பேட்டையை சேர்ந்த மரிது ஷியாமளா (18) என்பவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். தங்களின் காதலை சில மாதங்களுக்கு முன், வீட்டில் இருவரும் கூறினர். ஆனால், இருவரும் […]
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்திதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2021 செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட […]