ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். …