சுமார் 375 பொருட்களுக்கான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருவதால், சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை இன்று முதல் விலை குறையும். அந்தவகையில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு அரசு மிகப்பெரிய ஜிஎஸ்டி குறைப்பை அறிவித்துள்ளது. “புற்றுநோய், அரிய நோய்கள் அல்லது கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று உயிர்காக்கும் மருந்துகள் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளன. பல மருந்துகள் 12 […]

சிறுவயதிலிருந்தே உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த 28 வயதான செர்ரி என்ற பெண், ஆரோக்கியமான வாழ்க்கைக்காக மேற்கொண்ட முயற்சியில் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார். சிறு வயதிலேயே எடையைக் குறைக்க அவர் எடுத்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. அதன் பிறகு, அவர் பல்வேறு எடை குறைப்பு முறைகளை முயற்சித்தார். ஜிம் பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை எனப் பல முயற்சிகளை எடுத்தாலும், சீரான தன்மை இல்லாததால் மீண்டும் எடை […]

ஆசியக் கோப்பை தொடரின் ‘சூப்பர் ஃபோர்ஸ்’ ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பிறகு பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் சர்ச்சைக்குரிய கொண்டாட்ட சைகை சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. நடப்பு ஆசிய கோப்பை சீசனில் க்ரூப்- ஏவில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி […]

H-1B விசா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இளம் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய K விசாவை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், H-1B விண்ணப்பங்களுக்கு அமெரிக்கா 100,000 அமெரிக்க டாலர் வருடாந்திர கட்டணத்தை அறிவித்தது, இது இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஐடி சேவை நிறுவனங்களிடையே கவலையைத் தூண்டியது. இந்தநிலையில், அக்டோபர் 1 முதல் உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா புதிய கே விசாவை அறிமுகம் […]

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு பணி […]

பொதுவாக சிரிப்புக்கான விஷயமாக கருதப்படும் குறட்டை, உண்மையில் இதய ஆரோக்கியத்திற்கான ஒரு தீவிர எச்சரிக்கை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தில் ஏற்படும் இந்த ஒலி, பல நேரங்களில் ‘தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறல்’ (Obstructive Sleep Apnea – OSA) எனப்படும் கடுமையான தூக்கக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “குறட்டை என்பது நல்ல தூக்கத்தின் அடையாளம் அல்ல” என்றும், இது இரவில் சுவாசப் […]

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 23 முதல் 26 வரை 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் சேர முன்பதிவு அவசியம் என்றும், அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் […]

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ரேஷன் அட்டையின் வகையை மாற்றிக்கொள்ள முடியும். பொதுவாக, தமிழ்நாடு அரசு அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டைகள் (PHH), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் (NPHH), சர்க்கரை ரேஷன் கார்டு மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டை என பல வகைகளில் அட்டைகளை வழங்குகிறது. உங்கள் தற்போதைய ரேஷன் அட்டை, உங்களின் தற்போதைய பொருளாதார நிலைக்கு பொருந்தவில்லை என்றால், அதை […]