தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • ஷாக்!. இயற்பியல் தெரிந்ததற்காக 14 ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொலையா?. உண்மை காரணத்தை வெளியிட்ட இஸ்ரேல்!.

    காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் மற்றும் ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    டெல் அவீவின் தரவுகளின்படி, ஈரானுக்கு எதிராக தொடங்கிய ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதல்களில் 14 அணு விஞ்ஞானிகளை கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ஈரான் மேற்கொண்ட அணு ஆயுத முயற்சிகளுக்கு இந்த விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. “கொல்லப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும், நிபுணர்களும் ஈரானிய அணுசக்தி திட்டத்தில் குறிப்பிடத்தக்க நபர்களாக இருந்தனர், மேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொண்டிருந்தனர்” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

    இச்செயலின் நோக்கம், தெஹ்ரானின் அணு ஆயுத மேம்பாட்டு திறனை நேரடியாக பலவீனப்படுத்தும் வகையில், அதன் முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் காரணமான நபர்களை குறி வைத்து நீக்கும் நடவடிக்கையாக இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த விஞ்ஞானிகள் இயற்பியல் அறிந்ததால் கொல்லப்படவில்லை என்றும் அணு ஆயுதங்களை உருவாக்குவதிலும் தயாரிப்பதிலும் நேரடியாக ஈடுபட்ட போராட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர் என்று பிரான்சுக்கான இஸ்ரேலிய தூதர் ஜோசுவா சர்கா பாரிஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விஞ்ஞானிகளில் இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள் மற்றும் வெடிபொருள் நிபுணர்கள் பலர் அடங்குவர். ஜூன் 13 அன்று நடந்த தாக்குதல்களின் ஆரம்ப அலையில் 14 பேரில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ளவர்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இறந்தனர்.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் கொலைவெறி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான விஞ்ஞானி கொலைகளுக்கு இஸ்ரேல் பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளது முதல் முறையாகும். இதுவரை, 2020ஆம் ஆண்டு ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்ட சம்பவத்தைப் போன்ற தாக்குதல்கள், பெரும்பாலும் மௌனமாகவோ அல்லது மறைமுகமாகவே ஏற்கப்பட்டவையாகவோ இருந்து வந்தன.

    ஆனால் தற்போது இஸ்ரேல், இந்த வகையான நடவடிக்கைகளை வெளிப்படையாகவும் நேரடியாகவும் நியாயப்படுத்தும் வகையில் பேசத் தொடங்கியுள்ளது. இது கடந்த சம்பவங்களை விட மிகவும் வித்தியாசமான அணுகுமுறையாகவும் கருதப்படுகிறது.

    இஸ்ரேலின் தூதவர் சார்காஸ் மேலும் கூறியதாவது, ஈரான் அணு ஆயுதம் பெற்றுவிடாமல் தடுப்பது என்பது இஸ்ரேலின் நீண்ட காலக் கொள்கையாகவே இருந்து வந்தது .”சமீபத்திய இழப்புகள், தெஹ்ரானின் அணு திட்டத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியுள்ளது. இழைத்த சேதம் ஆழமானதும், நீடித்ததுமானதும் ஆகும்,” என அவர் தெரிவித்தார்.

    இருப்பினும், இந்த நடவடிக்கையின் நீண்டகால செயல்திறன் குறித்து அணுசக்தி நிபுணர்கள் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் நிபுணருமான மார்க் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், “இந்தக் கொலைகளும், அணுத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் தற்காலிக தாமதங்களை ஏற்படுத்தலாம், ஆனால் ஈரானின் அணு திட்டம் முழுமையாக தகர்ந்து போய்விடும் எனக் கூற முடியாது,” என்றார்.

    மேலும் இதன் ப்ளு ப்ரிண்ட் இன்னும் இருக்கிறது. இதை அடுத்த தலைமுறை PHD நிபுணர்கள் அதைத் தொடர்ந்து செயல்படுத்த முடியும்,” என மார்க் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறினார். “இந்த நடவடிக்கைகள் ஈரானின் திட்டத்தை சிறிது பின்னோக்கி தள்ளக்கூடும், ஆனால் ஈரான் ஏற்கனவே மாற்று திட்டங்களை (backups) உருவாக்கி வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். அந்த மாற்று குழுவில் நிபுணத்துவம் குறைவாக இருக்கலாம், ஆனால் நேரம் சென்றபின் அவர்கள் அந்த பணியை நிறைவேற்றக்கூடியவர்களாக மாறுவார்கள் என்று குறிப்பிட்டார்.

    Readmore: 2026 முதல் 10 ஆம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு!. CBSE ஒப்புதல்!. முழுவிவரம் இதோ!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் […]

தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பதவிகள் தொடர்பாக சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஹரிஷ், கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். “13 வருடமாக உயிரையே வைத்து உழைத்தேன்… இனி இந்த கட்சி வேண்டாம்!” எனக்கூறிய ஹரிஷ், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் மீது உண்மையான நம்பிக்கையோடும், தொண்டுமனப்பான்மையோடும் செயல்பட்டதாகக் கூறும் ஹரிஷ், பொதுச்செயலாளர் ஆனந்த் பணம், சாதி […]

2026ம் கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020 அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதும் வகையில் பொதுதேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. […]

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 26) முதல் ஜூலை 1-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு […]

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 10 முதல் 17-ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள […]

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]

தேர்வு செய்யப்பட்ட 2346 ஆசிரியர்கள் குற்ற பின்னணி குறித்து ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 பேர் கொண்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. […]

காபி குடிப்பதால் ஏராளமான உடல்நல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான தீமைகளும் உள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, உடனடி காபி பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டன்ட் காபி குடிப்பதால், பார்வை தொடர்பான ஒரு கடுமையான நோயான வயதுசார் மாகுலர் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என சீனாவின் ஹூபே மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. […]

சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் இன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு 18.06.2025 […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் […]