இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமாகவும், AI அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, FY25 ஆண்டை வலுவான நிதி மற்றும் செயல்திறன் முன்னேற்றத்துடன் நிறைவு செய்துள்ளது. நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டாக 88% வருவாய் வளர்ச்சியையும், EBITDA இழப்பை 20% குறைப்பையும் எட்டியுள்ளது. அதோடு, வருவாய் ஈட்டும் திறனை வலுப்படுத்தி, புவியியல் விரிவாக்கத்தையும், செயல்திறன் மேம்பாட்டையும் விரைவுபடுத்தி, லாபகரமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. FY25 […]

பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மையக்கரு என்று கூறி, ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தானின் பொய்களை இந்தியா அம்பலப்படுத்தியது. பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவதும் கௌரவிப்பதும் அதன் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் ஒரு தசாப்த காலமாக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தியா […]

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படும் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியர்வர் தலைமறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வசந்த் குஞ்ச் […]

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற […]

ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கம், விரைவில் முழு அளவிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்று டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எண்ணெய்க்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய தங்க இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதால், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள […]

ஆளும் பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தேர்தல் நடக்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். வாக்குத்திருட்டு தொடர்பாக 100 சதவீத ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நான் முன் வைக்கிறேன். வாக்குத் திருட்டுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாத்து […]

இந்தியாவின் மிகப்பெரிய 4-சக்கர EV உற்பத்தியாளரும், நாட்டின் மின்சார இயக்கம் புரட்சியில் முன்னோடியுமான Tata. EV, Nexon. EV 45 இல் Adas பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் தோற்றத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், நிறுவனம் பின்புற ஜன்னல் சன்ஷேட் மற்றும் சுற்றுப்புற விளக்குகள் போன்ற அம்சங்களையும் சேர்த்துள்ளது. இவை வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக மதிப்பை வழங்குகின்றன. கூடுதலாக, Tata. EV புதிய Nexon. EV DarkEdition ஐயும் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் சட்டவிரோத மருந்துகள் மற்றும் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்து கடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் கூறினார். கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் […]