fbpx

தேசிய செய்திகள்

  • இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பம்.. இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்தது ஏன்?

    இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள இந்திரா காந்தி முன்வந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். 2013 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு Smiling Buddha என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை நடந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த சலுகை வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. ஜூலை 22, 1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, விக்கிலீக்ஸ் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.

    விக்கிலீக்ஸ் அறிக்கையில் இதுகுறித்து இந்திரா காந்தி பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. அதில் “ அணு ஆயுதசோதனையின் அமைதியான மற்றும் பொருளாதார நோக்கங்களை நான் (சுல்பிகர் அலி) பூட்டோவுக்கு எழுதிய கடிதத்தில் விளக்கினேன், மேலும் இந்தியா தனது அணுசக்தி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது போலவே பாகிஸ்தானுடனும் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்று இந்திரா காந்தி கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

    விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில், 1974 ஆம் ஆண்டு முதல் அணுசக்தி சோதனைகளை நடத்திய பிறகு, இந்திரா காந்தி பின்னர் அண்டை நாடுடன் அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்ததாக கூறப்படுகிறது.

    விக்கிலீக்ஸ் ஆவணங்களின்படி, இந்திரா காந்தி பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவின் அணுசக்தி லட்சியங்கள் அமைதியானவை என்றும் பொருளாதார ரீதியாக உந்தப்பட்டவை என்றும், எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றும் விளக்கினார்.

    ஜூலை 22, 1974 தேதியிட்ட தனது கடிதத்தில், கதிரியக்க கசிவு குறித்த பூட்டோவின் கவலைகளை இந்திரா காந்தி நிராகரித்தார். 1971 வங்காளதேச விடுதலைப் போருக்குப் பிறகு பதற்றம் அதிகரித்த நேரத்தில் இந்த திட்டம் வந்ததாகக் கூறப்படுகிறது, அப்போது இந்தியா சுமார் 93,000 பாகிஸ்தான் வீரர்களைக் கைப்பற்றியது. ஒரு உறுதியான ஒப்பந்தத்தைப் பெறாமல் இந்தக் கைதிகளைத் திருப்பி அனுப்ப இந்திரா காந்தி எடுத்த முடிவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

    இருப்பினும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்திரா காந்தி சலுகை ஒரு குறிப்பிடத்தக்க அமைதி முயற்சியாக பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்திரா காந்தியின் இந்த சலுகை இறுதியில் சுல்பிகர் அலி பூட்டோவால் நிராகரிக்கப்பட்டது.

    அமைதியான அணுசக்தி முன்னேற்றத்தை மேற்கொள்வதில் இந்திரா காந்தி கொண்டிருந்த நம்பிக்கை சர்வதேச அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா மீது கடுமையான தொழில்நுட்பத் தடைகளை விதிக்க வழிவகுத்தது. அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழு (NSG) உருவாக்கம் ஒரு நேரடி எதிர்வினையாகும், இது இந்தியாவைப் போலவே பரவல் தடை ஒப்பந்தத்திற்கு (NPT) வெளியே உள்ள நாடுகள் தங்கள் அணுசக்தி திறன்களை மேலும் வளர்த்துக் கொள்வதைத் தடுக்கும் நோக்கில் இருந்தது.

    இதனிடையே, இந்தியாவின் இரண்டாவது சுற்று அணுசக்தி சோதனைகள் நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் 1998 இல் தனது முதல் அணுசக்தி சோதனையை நடத்தியது, இது பிராந்திய ஆயுதப் போட்டியில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

    விக்கிலீக்ஸின் அறிக்கை இந்த வரலாற்று அத்தியாயத்தைச் சுற்றி சமூக ஊடகங்களில் விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டன, அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள இந்திரா காந்தி வழங்கியது உண்மையான அமைதி முயற்சியா அல்லது அரசியல் ரீதியான நடவடிக்கையா என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.

    Read More : ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. IRCTC-ன் Swarail சூப்பர் ஆப் அறிமுகம்.. இனி அனைத்தும் ஒரே இடத்தில்..!

சினிமா 360°

உலகம்

  • பாகிஸ்தான் : எல்லைப் படையை குறிவைத்து நடந்த கார் குண்டு வெடிப்பு.. பலர் உயிரிழப்பு…

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணமான குலிஸ்தான் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் எல்லைப் படை (FC) கோட்டையை ஒட்டியுள்ள குலிஸ்தான் நகரத்தின் குவெட்டா-சாமன் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜப்பார் வணிக சந்தையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இந்த பயங்கர குண்டுவெடிப்பில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கடைகள் மற்றும் வாகனங்களை முற்றிலும் அழிக்கப்பட்டன. மேலும் FC கோட்டையின் சுவர்களும் சேதமடைந்தன. சந்தையில் உள்ள பல கடைகளும் தீப்பிடித்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    அரசாங்க சார்புத் தலைவரான பழங்குடி போர்வீரர் பைசுல்லா கபிசாயை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கார் குண்டு வெடித்தபோது அவர் சந்தையில் இருந்ததாகவும் ஆனால் அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவரின் காவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

    வணிகச் சந்தையை ஒட்டி அமைந்துள்ள FC கோட்டையின் பின்புற சுவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. துணை ஆணையர் கிலா அப்துல்லா முகமது ரியாஸ் தாவர் இதுகுறித்து பேசிய போது “இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவர்களுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்,” என்று தெரிவித்தார்.

    “காரில் IED வெடிபொருள் பொருத்தப்பட்ட நிலையில், அது கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கப்பட்டது போல் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

    இந்த தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றுள்ளது, மேலும் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதே நேரத்தில் கிலா அப்துல்லா மற்றும் சாமன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சமீப காலங்களில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) இடையே தெளிவான ஒருங்கிணைப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    “பலுசிஸ்தானுக்குள் TTP மற்றும் BLA இரண்டும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக விசுவாசமாகவும் ஒருங்கிணைந்தும் செயல்படுகின்றன என்ற உண்மையை மீண்டும் நிறுவுகின்றன. சிந்து மாகாணத்தில் உள்ள மற்ற பிரிவினைவாதக் குழுக்கள் – BLA மற்றும் TTP உடன் தொடர்புகளைக் கொண்ட சிந்து தேஷ் புரட்சி இராணுவம் உட்பட – இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் குறிவைத்து தாக்குதல்களை நடத்த தொடங்குவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம்,” என்று ஆய்வாளர் கமர் சீமா கூறினார்.

    “இந்த போராளிக் குழுக்கள் ஆப்கானிஸ்தானிடமிருந்து அனைத்து ஆதரவையும் உதவியையும் பெறுவதாக பாகிஸ்தான் பலமுறை கூறியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

    பலூச் விடுதலை இராணுவம் (BLA) மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. BLA தலைமையிலான குழுக்களால் சமூக ஊடக பிரச்சாரங்களும் தொடங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாடாக மாறிவிட்டதாக அந்த அமைப்பு சமீபத்தில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள இந்திரா காந்தி முன்வந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். 2013 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு Smiling Buddha என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை நடந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த சலுகை வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. ஜூலை […]

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணமான குலிஸ்தான் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் எல்லைப் படை (FC) கோட்டையை ஒட்டியுள்ள குலிஸ்தான் நகரத்தின் குவெட்டா-சாமன் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜப்பார் வணிக சந்தையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கடைகள் மற்றும் வாகனங்களை முற்றிலும் அழிக்கப்பட்டன. மேலும் FC கோட்டையின் சுவர்களும் […]