குஸ்கா என்றாலே ஹோட்டல் பிரியாணியின் மணமும், சால்னாவுடன் சேர்ந்து சாப்பிடும் அந்த தனி சுவையும் நினைவுக்கு வரும். இறைச்சி அல்லது காய்கறிகள் இல்லாமலேயே, சரியான மசாலா மற்றும் அரிசி பக்குவத்துடன் செய்தால் குஸ்கா சுவையாக இருக்கும். பொதுவாக பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசியைப் பயன்படுத்தி குஸ்கா தயாரிக்கப்படுகிறது. ஹோட்டலில் கிடைக்கும் அதே மாதிரியான வாசனையும் சுவையும் வீட்டிலும் கிடைக்க வேண்டுமென்றால், கல்பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனைப் […]
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வது மட்டுமின்றி, தினசரி உணவிலும் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக காலை நேரத்தில் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கக்கூடிய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும். அந்த வகையில், பாரம்பரிய கருப்பு கவுனி அரிசியில் தயாரிக்கப்படும் கஞ்சி ஒரு நல்ல காலை உணவு தேர்வாக இருக்கலாம். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால் நீண்ட நேரம் […]
வெறும் ட்ரெய்லர் இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய இசைத் துணுக்கு, பின்னர் ரசிகர்களின் வரவேற்பால் தனிப்பாடலாக மாறியிருக்கிறது. தற்போது ‘டிசி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராகா ஆஃப் ரிவெஞ்ச்’ இசைத் துணுக்கு உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘டிசி’ படத்தின் ட்ரெய்லரை திரையிட திட்டமிடப்பட்டிருந்தபோது, அதற்கான இசையை தயார் செய்ய படக்குழுவுக்கு மிகக் குறுகிய கால […]
பல ஆண்டுகளாக ஆக்ஷன், எமோஷன், கமர்ஷியல் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது திரைப்பயணத்தில் சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வழக்கமான சூர்யா படங்களில் இருந்து மாறுபட்ட குடும்பம், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி […]
டெல்லியில் 55 வயது நபர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கணவரை கொலை செய்ய தனது காதலனுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அவர் பேரம் பேசியதும், கொலைக்குப் பிறகு வீட்டில் திருட்டு நடந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாலால் (55). ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றி வந்த இவர், […]
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் NALSAR (National Academy of Legal Studies and Research) எனப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில், BCI (Bar Council of India) தலையிட்டதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. NALSAR என்றால் என்ன? NALSAR என்பது ஹைதராபாத்தில் […]
பாக்கெட் உணவுப் பொருட்களில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருந்தால், அதுகுறித்த எச்சரிக்கை தகவலை பேக்கெட்டின் முன்பக்கத்தில் குறிப்பிடுவது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI-க்கு உச்சநீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாக்கெட் உணவுகளில் உள்ள சர்க்கரை, […]
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக, தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகங்களை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முதற்கட்டமாக, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை அலுவலக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக சுமார் ரூ.5 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய […]
அன்றாட சமையலை வேகமாக முடிக்க உதவும் சாதனங்களில் பிரஷர் குக்கருக்கு முக்கிய இடம் உண்டு. சில நிமிடங்களில் உணவை சமைத்துவிடலாம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், அவசரத்தில் குக்கரை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்தில் இயங்குவதால், சிறிய கவனக்குறைவுகூட விபத்துக்கு வழிவகுக்கும். அதனால், குக்கரை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் சில அடிப்படை விஷயங்களை கவனிப்பது […]
வீட்டில் தினமும் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் சமையலறையும் ஒன்று. உணவு தயாரிக்கும் இடம் என்பதால், அங்கு சுத்தம் மட்டுமல்லாமல் பாதுகாப்பும் முக்கியம். ஆனால் நீண்ட நாட்களாக பயன்படுத்திய சில பொருட்களை, அவை சேதமடைந்த பிறகும் பலர் மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இது உணவு சுகாதாரம் முதல் தீ விபத்து வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகலாம். சமையலறையை அவ்வப்போது சுத்தம் செய்வதுடன், அங்கு இருக்கும் பொருட்களின் நிலையை சரிபார்த்து தேவையற்றவற்றை அகற்றுவதும் […]

