தலைவலி ஏற்பட்டவுடன் உடனடியாக மாத்திரை எடுத்துக்கொள்வது பலருக்கும் வழக்கமாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாதது அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற எளிய காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். இதுபோன்ற சூழலில் தண்ணீர் அருந்துவது உதவியாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா குறிப்பிட்டுள்ள எளிய முறையொன்று கவனம் பெற்றுள்ளது. அவர் பகிர்ந்துள்ள முறையின்படி, சிறிதளவு உப்பை நாக்கில் வைத்து, பின்னர் […]

சமூக வலைதளங்களில் பிரபலமான அமலா ஷாஜி, தற்போது வெள்ளித்திரையில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். அதுவும் ஏற்கனவே பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இருவரும் இணையும் புதிய படத்துக்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் இது 26-வது படமாக அமைந்துள்ளது. ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக […]

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பெருங்காயம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனங்களின் குறிப்பிட்ட பெருங்காய தயாரிப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகள் பூர்த்தி செய்யப்படாதது ஆய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. FSSAI மேற்கொண்ட ஆய்வில், எவரெஸ்ட் Food Products மற்றும் Laljee Godhoo & Co. நிறுவனத்தின் LG Brand Unit ஆகியவற்றின் குறிப்பிட்ட பெருங்காய […]

தமிழகத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்றும் முயற்சியில் அடுத்தகட்ட நகர்வை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. ஏற்கனவே மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து புதிய முதலீடுகளை பெறும் நோக்கில் முதல்வர் விஜய் பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயணம் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விஜய் […]

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பணிநேர நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நேரக்கட்டுப்பாடு மற்றும் பணிச்செயல்பாடு, தலைமைச் செயலகத்தின் அன்றாட பணிச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் தனது அலுவல் பணிகளில் நேரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. காலையிலேயே […]

வெளிச்சந்தையில் ரூ.60 வரை விற்கப்படும் ஒரு பொருள், இனி ரேஷன் கடையில் வெறும் ரூ.15-க்கு கிடைக்கப் போகிறது என்ற தகவல் குடும்ப அட்டைதாரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் கோதுமை மாவை வழங்கும் புதிய முயற்சியை அரசு முன்னெடுக்க உள்ளது. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் கோதுமை மாவை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. […]

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி. பாதிப்பைத் தடுப்பதில் உலகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதில் நீடிக்கும் சமத்துவமின்மை காரணமாக, பல குழந்தைகள் இன்னும் தடுக்கக்கூடிய நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்பு அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா. குழந்தைகள் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது. UNICEF வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2025ஆம் ஆண்டில் தினமும் சுமார் 660 குழந்தைகள் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். […]

ஐந்து பச்சிளம் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, ஒரு தாயின் முதல் பொறுப்பு அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதுதான். ஆனால், காரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கணவரையும் ஐந்து குழந்தைகளையும் தவிக்கவிட்டு, போனில் அறிமுகமான 19 வயது இளைஞருடன் சென்ற சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமாகி, பின்னர் காதலாக […]

தமிழக அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்யின் பெயர், தற்போது தமிழக எல்லையை கடந்து தேசிய அரசியல் விவாதத்துக்குள் நுழைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணமாக, வடஇந்தியாவின் முக்கியமான ஆறு மாநிலங்களில் விஜய்க்கு ஆதரவு இருப்பதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு தகவல்களே அமைந்துள்ளன. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தும் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் […]

சம்பளம் அல்லது வருமானம் குறைவாக இருப்பதால் பணத்தை சேமிக்க முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சேமிப்பின் அளவைவிட அதை தொடர்ந்து செய்யும் பழக்கமே முக்கியம். வருமானம் எவ்வளவு இருந்தாலும், செலவுகளை திட்டமிட்டு நிர்வகித்தால் எதிர்கால தேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க முடியும். முதலில், மாதம் கிடைக்கும் வருமானத்தை முழுமையாக செலவு செய்வதை தவிர்த்து, சிறிய தொகையாக இருந்தாலும் சேமிப்புக்கு என்று தனியாக ஒதுக்கலாம். சம்பளம் கிடைத்த பிறகு […]