கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள கும்ளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாராயணசாமி (39). இவரது மனைவி வித்யா (30). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கார்பெண்டர் வேலை செய்யும் புனித் என்பவருக்கும் கடந்த ஓராண்டாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனை அறிந்த கணவர் நாராயணசாமி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், வித்யா கள்ளக்காதலை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால், கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஊரில் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (41). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பேத்தி முறையில் உள்ள இவரது உறவினரான 17 வயது சிறுமி தனியார் கல்லுாரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனியாக இருந்த மாணவியை கோவிந்தராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி கர்ப்பமானார். கடந்த 21ஆம் தேதி இரவு மாணவிக்கு கடுமையான வயிற்று வலி […]
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 30-ஆம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டும் கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழகம் தனது […]
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் அமளியில் ஈடுபட்டுனர். இந்நிலையில், தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “பல்லாயிரம் கோடி பறந்துபோனதா? பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது. பிசினஸ் பார்த்துவிடலாம் என்று […]
பிரேசிலின் ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் பகுதியில், முன்னாள் மனைவியை கடத்திச் சென்று 5 நாட்களாகப் பதுங்கு அறையில் சங்கிலியால் பிணைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 டிசம்பரில் திருமண உறவை முறித்துக்கொண்ட 24 வயதான செவிலியர் எமிலியானே தமாரா, தனது இரண்டு குழந்தைகள் குறித்துப் பேசுவதற்காக முன்னாள் கணவரான அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவை சந்திக்க சென்றபோது மாயமானார். அவரை […]
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் மரத்தடி முதல் மாபெரும் ஆலயங்கள் வரை எங்கும் வீற்றிருந்தாலும், தனித்துவமான வரலாற்றுச் சிறப்பும் அபூர்வ ஆற்றலும் கொண்ட சில குறிப்பிட்ட தலங்கள் மனித வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. அந்த வகையில், பாறையில் வடிக்கப்பட்ட 6 அடி உயர வலம்புரி விநாயகராகவும் கையில் சிவலிங்கம் ஏந்திய திருக்கோலத்திலும் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற 1,600 ஆண்டுகள் பழமையான சிவகங்கை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம், […]
முன்னோர்கள் காலம் தொட்டே பின்பற்றி வந்த கோலமிடுதல், காகத்திற்கு உணவிடுதல், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தல் மற்றும் திருஷ்டி கழித்தல் போன்ற பல பாரம்பரிய பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளாகக் கருதிப் புறந்தள்ளி வருகின்றனர். அந்த வகையில், வீட்டின் முன் காகம் உட்கார்ந்து கரைந்தால் வீட்டிற்கு விருந்தினரோ அல்லது உறவினர்களோ வரப்போகிறார்கள் என்ற காலம்காலமாக நிலவி வரும் நம்பிக்கையும் மூடநம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நம்பிக்கைக்குப் பின்னால் பண்டைய தமிழர்களின் […]
உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும் மத நம்பிக்கைகளிலும் பில்லி, சூனியம், ஏவல் மற்றும் செய்வினை போன்ற மறைமுக எதிர்மறை ஆற்றல்கள் குறித்த நம்பிக்கைகள் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. நவீன அறிவியலும் பகுத்தறிவும் இவற்றை மூடநம்பிக்கைகளாகக் கருதினாலும், காரணமே இன்றி அடுத்தடுத்து ஏற்படும் உடல், மன மற்றும் பொருளாதார ரீதியான கடுமையான பாதிப்புகளால் நிலைகுலைந்து போகும் மனிதர்களை இன்றும் நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகளின் ஆதிக்கத்தில் […]
ஒரு சிறிய துவாரம் வழியாக மட்டுமே முழுமுதற் கடவுளான சிவபெருமானை தரிசிக்கக்கூடிய ஒரு அதிசய சிவாலயம் தமிழ்நாட்டில் அமைந்திருப்பது ஆன்மிக பிரியர்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள ‘ஒரு கோடி’ என்ற கிராமத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மூலவர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் என்ற இயற்பெயரிலும், பக்தர்களால் அன்போடு ‘ஸ்ரீ கோடி கொடுத்த நாதர்’ என்றும் போற்றப்படுகிறார். ஒரு காலத்தில் ஒரு கோடி சித்தர்கள் ஒன்றுகூடி ஈசனை நோக்கித் […]
அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். ➣ பள்ளி மாணவர்களின் உலகளாவிய கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய ‘தமிழ்நாடு அறிவுப் பாடத்திட்டம்’ முறைப்படி அறிமுகப்படுத்தப்படும். ➣ மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ‘வாசிப்பை நேசிப்போம்’ இயக்கத்தின் கீழ், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில […]

