fbpx

ஊடக துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை…! மத்திய அமைச்சர் தகவல்..‌!

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை என பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒரு பக்கம் நாம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகள் தொடர்பாக பேசி வருகிறோம், மறுபக்கம் தொலைக்காட்சி மற்றும் ஒடிடி தளங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் இந்திய கலாச்சார பரப்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்றார்.

பொழுதுபோக்குக்கு நவீனம் மற்றும் கவரும் வகையிலான உள்ளடக்கங்கள் வரவேற்கத்தக்கவை, ஆனால், அவற்றை வெளிப்படுத்தும் முறையில் கண்ணியம் தேவை எனறும் இந்திய குடும்பங்கள் மற்றும் கலாச்சாரங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையினர் சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றால், சமூகத்தில் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுடன் அரசு தலையிட்டு ஒழுங்குமுறை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று அவர் கூறினார்.

Vignesh

Next Post

மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்..!! மொட்டை அடித்து கணவன் வீட்டுக்கு துரத்தியடித்த பெற்றோர்..!!

Fri Nov 18 , 2022
மகள் காதல் திருமணம் செய்ததால், அவரை கடத்தி மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய பெற்றோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மாதவ். இவர் பக்கத்து ஊரில் வசித்து வரும் அட்சிதாவை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் திருமணத்துக்கு பிறகு இருவரும் தனி வீடு எடுத்து வசித்து […]
காலையில் அண்ணனுடன்..!! அப்புறம் தம்பியுடன்..!! திருமணம் முடிந்த கையோடு அரங்கேறிய சம்பவம்..!!

You May Like