TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
முகலாய காலம் தொடர்பான பல கதைகள் எப்போதும் விவாதத்தில் இருக்கும். சில நேரங்களில் அது ஒருவரின் ஆட்சியின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்புடையது, சில சமயங்களில் ஒரு அரசனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடையது. முகலாய சகாப்தத்துடன் தொடர்புடைய இதுபோன்ற பல கதைகள் வரலாற்றின் பக்கங்களில் முக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தனது வளர்ப்புத் தாயைக் காதலித்த முகலாயப் பேரரசரைப் பற்றிய ஒரு கதை உள்ளது. அதன் விளைவு அக்பர் […]
உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, உறைபனி வானிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை ஏறுபவர்கள் […]
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 3,07,900-க்கும் மேற்பட்ட இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்யாவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போருக்கு முன்னர் இதுபோன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய கொள்முதல்களின் அளவு படையெடுப்புக்கு முந்தைய நிலைகளை விட மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கு முன்பு, இறந்த வீரர்களின் உறவினர்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து […]
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) மாதிரிப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகள் மீண்டும் தொடங்கவுள்ளது. அதேபோல், […]
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-25ஆம் ஆண்டில் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் இந்த […]
பூமியின் பெருங்கடல்கள் கடந்த இருபது ஆண்டுகளில் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன, குறிப்பாக அவை இருண்டு வருகின்றன என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Global Change Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் கடல்களில் 21%க்கும் அதிகமான பகுதி, சுமார் 75 மில்லியன் சதுர கிலோமீட்டரைத் தாண்டும் பரப்பளவில் குறிப்பிடத்தக்க அளவில் இருண்டு (darkening) காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Plymouth பல்கலைக்கழகம் […]
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ’தக் லைஃப்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில், ” ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது ”உயிரே உறவே தமிழே” என தொடங்கினேன். தமிழில் […]
தமிழ் சினிமாவில் பகுத்தறிவோடு நக்கலும், நய்யாண்டியும் செய்தவர் எம்.ஆர்.ராதா. இவர் நடித்த படங்களில் இவரது டயலாக்கை வைத்தே கண்டறியலாம். இவர், 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம். ஆர். ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு – ராஜம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்த எம்.ஆர்.ராதா, பள்ளிக்குப் போகாமல் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்னைக்கு […]
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசாங்கத்தில் சிறப்பு அரசு ஊழியராக (SGE) தனது 130 நாள் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவித்துள்ளார். அரசாங்க செலவினங்களைக் குறைக்க வாய்ப்பு அளித்ததற்காக அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் […]
கலைஞர் அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் […]