fbpx

கணவரை கொன்று கள்ளக்காதலன் வீட்டில் புதைத்த மனைவி..!! 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி..?

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

டெல்லி காஜியாபாத் என்ற நகரத்தில் வசிப்பவர் சவிதா. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரின் கணவர் சந்திர வீர்-ஐ அவரின் சகோதரர் கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்திருந்தார் சவிதா. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், எவ்வித துப்பும் துலங்காமல் இருந்தது. சமீபத்தில் இவ்வழக்கில் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. சந்திர வீரின் மனைவி சவிதாவுக்கு அவர் காணாமல் போனதில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சவிதாவை பிடித்து மீண்டும் விசாரித்த போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சவிதாவிற்கும் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு சந்திரவீர் தடையாக இருந்துள்ளார். இதனால் சவிதாவும், அருணும் சேர்ந்து சந்திரவீரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். அதோடு அரிவாளாலும் வெட்டியுள்ளனர்.

கணவரை கொன்று கள்ளக்காதலன் வீட்டில் புதைத்த மனைவி..!! 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி..?

சந்திரவீரை கொலை செய்வதற்கு முன்பே அருண் வீட்டில் ஆழமான குழி ஒன்றை தோண்டி தயார் நிலையில் வைத்திருந்தனர். அதன் பிறகு சந்திரவீரை கொலை செய்து 7 அடி குழியில் போட்டு புதைத்துவிட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி தீக்‌ஷா சர்மா கூறுகையில், ”சவிதாவும், அருணும் சேர்ந்து சந்திரவீரை கொலை செய்து அருண் வீட்டில் புதைத்துவிட்டனர். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிமெண்ட் தளம் அமைத்து அந்த வீட்டில் அருண் வசித்து வந்தார். தற்போது தோண்டிப் பார்த்ததில் சந்திரவீர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

#சென்னை : விளையாட்டினால் ஏற்பட்ட விபரீதம்.. ஒன்றறை மாத குழந்தை பரிதாப பலி.!

Tue Nov 15 , 2022
சென்னை மாநகர பகுதியில் வெங்கடபுரத்தில் யுவராஜ் – கௌசல்யா தம்பதிகள் இவர்களின் பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று யுவராஜ்  வழக்கம் போல் வேலைக்கு சென்ற பின்னர் , மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒன்றறை வயது குழந்தை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளது.  இத‌னிடையே அந்த சிறுபிள்ளை  விளையாடிய பொம்மையானது மீன் வளர்ப்பு தொட்டியில் விழுந்த நிலையில், அதனை எடுக்க குழந்தை முயலும் போது மீன் […]

You May Like